இலக்கியம்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
\n"; } ?>
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.! – நாலடியார் பாடல்
வித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி சிறுவர் பகுதிக்குச் செல்ல இவ்விடம் சொடுக்கவும். வாசுகி வாத்தும் நண்பர்களும் இவ்விடம் சொடுக்கவும்.
பனிப்பூக்கள் சஞ்சிகை தனது பதின்னாங்கவது ஆண்டைக் கொண்டாடுகின்றது. இவ்விடம் புதிய அம்சங்கள் வரவுள்ளன. பூக்களின் Podcast, போட்டிகள், நேர்முகங்காணல்கள், அமெரிக்க சமூகவியல் கட்டுரைகள் என பல விதமான பகுதிகள் உங்களுக்காகத் தந்துள்ளோம். மேலும் படங்கள், சுருக்கங்கள், தற்காலிக உள்ளடக்கம் (கதைகள்), குறுகிய வடிவ வீடியோக்கள், நீண்ட வடிவ வீடியோக்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் பட்டியல்கள் தரப்படும்.
மார்ச் மாதம் என்றவுடன், மரங்களில் இலைகள் துளிர்த்து, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ரம்மியமானச் சூழல் மனதில் உருவாவது இயல்பு. இயற்கையின் படைப்பில் தாவரங்களும், மரங்களும் புத்துயிர் பெறுவதைப் போல, வாழ்க்கையில் வசந்தம் என்பது மாற்றங்களை உணர்த்தி புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகளைத் துளிர்க்கச் செய்கிறது. குளிர்கால இறுக்கங்கள் களையப்பட்டு, மன ரீதியாக மட்டுமல்லாமல், உடலிலும் மெலிதான புத்துணர்ச்சி பரவும். இந்த உத்வேகத்தைக் குறிக்கவே, இப்பருவத்தை ஆங்கிலத்தில் ‘ஸ்ப்ரிங்கிங் டைம்’ (springing time) அல்லது சுருக்கமாக ‘ஸ்ப்ரிங்’ (Spring) […]
அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். “புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ …” “இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிகளுக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க […]
அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]
தனி மனிதர்களை, அவர்கள் மீதான அபிமானத்தால், அன்பால் அல்லது எதோவொரு ஈர்ப்பால் கவரப்படுவது பொதுவான மனிதப் பண்பாகும். அந்த மனிதரின் குணநலன், திறமை காரணமாக அவரை முன்னோடியாகக் கருதி, அவரது வழிகாட்டுதலை முன்மாதிரியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு. அந்த மனிதரைத் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றுவது, அவர் செய்வதெல்லாம் உலக நன்மைக்காகவே என்று நம்புவதும் நாயக வழிபாடாக மாறிவிடுகிறது. புராண காலங்களிலிருந்து, செயற்கை நுண்ணறிவின் பிடியில் சிக்கி உழலும் இன்றைய நாள் வரை, இத்தகைய பிரமுகர்களை உயர்த்திப் பிடித்து, […]
பல்வழி தொடர்பு மையத்திலிருந்து நுண்ணறிவைப் பெறுவது எப்படி?
இன்று பல நிறுவனங்கள், அதிநவீன தொடர்பு மையங்களில் முதலீடு செய்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் – மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, இணையம் அல்லது சமூக ஊடகம் என எந்த வழியிலும் இந்த தொடர்பு மையங்களைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். படங்கள், காணொளி, ஒலித்துண்டுகள், செய்தித் துண்டுகள் என பல்வகைப்பட்ட தகவல்களை, எந்தவகை கட்டுப்பாடு, தரவரிசை ஒழுங்கு,கட்டமைப்பும் இல்லாமல் குவியல்களாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த தகவல் களஞ்சியங்களிலிருந்து நமக்கு தேவைப்படும் தகவல்களைப் பெறுவது, […]
‘ஷெரி மடிகன்’ மற்றும் பல ஆய்வாளர்கள் 2019 நடத்திய ஒரு ஆய்வில், 2, 3 மற்றும் 5 வயதுடைய 2,441 குழந்தைகள் (50.2 சதவீதம் சிறுவர்கள் மற்றும் 49.8 சதவீதம் சிறுமிகள்) ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில், 8 வயதுக்கும் குறைவான அமெரிக்க குழந்தைகளில் 98% பேர் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் சராசரியாக, அவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக திரைகளில் செலவிடுகிறார்கள்” என்றும் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா […]
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன
ஒரு நுண்ணியல் AI குமிழி இல்லை—மூன்று உள்ளன இதன் அர்த்தம் தான் என்ன.? மூத்த தொழில்நுட்பவியலாளர்களும் சில மிதமான முதலீட்டாளர்களும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருப்பதாக நினைக்கும் போதெல்லாம், பெரும்பாலும் ஒரு நுண்ணியல் AI குமிழி இருக்கும். ஆனால் அது அதை விட மோசமானது. ஒரு நுண்ணியல் AI குமிழி மட்டும் இல்லை: மூன்று உள்ளன. முதலாவதாக, பொருளாதார வல்லுநர்கள் சொத்து குமிழி அல்லது ஊக குமிழி என்று அழைப்பதில் நுண்ணியல் AI நிச்சயமாக உள்ளது. […]
“குரு லேக எட்டுவன்டீ குனிகி தெளியக போது” என்ற தியாகராஜர் கீர்த்தனைக்கு இயம்ப, ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 5 அன்று மாலை ஒரு அருமையான இசை அனுபவம் குரு சமர்ப்பணமாக அமைந்தது. நாதரஸா இசை பள்ளியின் கலை இயக்குனர் திருமதி. நிர்மலா ராஜசேகரின் கற்பித்தலில் அப்பள்ளியின் செயலாளர் திருமதி. பத்மா வுடலி, பொருளாளர் திருமதி. ஸ்ரீவித்யா சுந்தரம் மற்றும் பலரின் ஒருங்கிணைப்பில் மிக அருமையான இசை நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் முதலில் திருமதி அபர்ணா பட்டா […]
‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்! பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்! தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்! தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்! அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்! அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்। அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்! அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்! தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்! தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்! தலைமையில் எனையேற்ற, தன்னையே ஏணியாக்கினாள்! தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்! பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்! […]
உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட இங்கேயே யாருண்டு? தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக அங்கலாய்கிறோம் மனிதம் இங்கே தலை தூக்கிட மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம் சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம் ஆண் பெண் இரண்டே சாதி எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி அன்பின் உலகம் ஆர்வமாய் படைத்திட்டே அகிலம் சிறக்க பாடு படுவோம் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் சமைத்திடவே […]
அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது
கோடைகாலங்களில், புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள் அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் […]
தரங்கினி நடனப் பள்ளியின் சமூக பணி
கற்கும் காலத்திலிருந்தே சிறந்த அர்ப்பணிப்புள்ள மாணவியாகவும், ஆசிரியப் பணியை உணர்ச்சி பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செய்து வரும் அமிர்தா சிறந்த நடன கலைஞர் என்பதில் ஐயமில்லை. தாம் பெற்ற நடனக் கலையை, வருங்கால இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், அவரின் குருவாகிய உயர்திரு. கிட்டு ஐயாவின் ஆசியுடன் 2005 ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் “ தரங்கினி நடனப் பள்ளி “(“Taraangini school of dance”) கடந்த 2016 ஆம் ஆண்டு மினசோட்டா மாகாணத்தில் […]
வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள மிலன் மந்திரில் மார்ச் மாதம் 16ஆம் தேதி அன்று அன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதைக் குறிக்கோளாக் கொண்டும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்து, கலர்ப் பொடிகளைத் தூவியும், வண்ண நீரைப் பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் […]
பிப்ரவரி 1, 2025 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் “சங்கமம் 2025” பொங்கல் விழாவை ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த விழாவில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை கொண்டாட்ட ஆட்டங்கள், உணவு விருந்து, விருந்தினர் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழா காலை 10:30 மணிக்கு பொங்கல் சிறப்பு விருந்துடன் தொடங்கியது. இதில் கருப்பட்டி பொங்கல், வடை, கூட்டு, சாம்பார் என பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதியம் 12:00 […]
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் செயல்படும் இந்திய கலை மற்றும் கலாச்சார சங்கம் (Indian Art and Culture Association) ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா மார்ச் 2 அன்று ஹேவர்டு செயல்திறன் மையத்தில் (Hayward Performance Center) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு நடனப் பள்ளிகளைச் சேர்ந்த திறமைமிக்க உள்ளூர் கலைஞர்களின் கண்கொள்ளாக் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், புகழ்பெற்ற நடன ஆசிரியர் கலைமாமணி கலா மாஸ்டர் அவர்கள் பிரத்யேக அழைப்பின் […]
1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ப்ரேக்டௌன்’ எனும் திரைப்படத்தைத் தழுவி வந்த தமிழ்த் திரைப்படம் “விடாமுயற்சி”. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கர்ட் ரஸ்ஸல் முழுவதுமாக மறந்து விட்டிருக்க, நம்ம ‘தல’யின் அளவான நடிப்பு அந்தத் திரைப்படத்தை ஒப்பீடலாக மனதிற்குள் கொண்டு வரவேயில்லை என்பதுதான் உண்மை. காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித்தும், த்ரிஷாவும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான அஜர்பெய்ஜானின் தலைநகரான ‘பாகு’வில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களுக்காக விவாகரத்து செய்வது […]
காற்றில் உலவும் கீதங்கள் – 2024
இவ்வருடத்தில் வெளியான படங்களில் இருந்து ரசிகர்களைக் கவர்ந்த பாடல்களில் தொகுப்பு. அரண்மனை 4 – அச்சோ அச்சோ சென்ற வருடம் அனிருத் இசையில், தமன்னா ஆட்டத்தில் புகழ்பெற்ற “வா காவலா வா” பாடல் போலவே, இவ்வருடம் ஹிப்ஹாப் ஆதி இசையில் தமன்னா மற்றும் ராஷி கன்னா ஆட்டத்தில் ஹிட் அடித்த பாடல் இது. அதே போன்ற இசை, அதே போன்ற ஆட்டம், ரசிகர்களுக்கும் அதே போல் பிடித்துப் போனது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களைத் […]
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்
பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!
அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்…! நம் கத்தோலிக்க தாய்த் திரு அவை, இந்த 2025ஆம் ஆண்டினை ‘புனித ஆண்டு’ ஆண்டாக அறிவித்து, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற நோக்குடன் கடந்து செல்ல, நம்மை இறைவழியில் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறது. கத்தோலிக்க திரு அவை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு ஆண்டுகளை புனித ஆண்டாக (ஜூபிலி) கொண்டாடுகிறது. இத்தகைய புனித ஆண்டில், திருப்பயணிகளாகிய நாம் பயணிக்க ஆரம்பித்த நிலையில், இறைமகன் இயேசுவின் மீது […]
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில் (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]
அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். “புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ …” “இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிகளுக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க […]
தனி மனிதர்களை, அவர்கள் மீதான அபிமானத்தால், அன்பால் அல்லது எதோவொரு ஈர்ப்பால் கவரப்படுவது பொதுவான மனிதப் பண்பாகும். அந்த மனிதரின் குணநலன், திறமை காரணமாக அவரை முன்னோடியாகக் கருதி, அவரது வழிகாட்டுதலை முன்மாதிரியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு. அந்த மனிதரைத் தெய்வீக அந்தஸ்துக்கு உயர்த்திப் போற்றுவது, அவர் செய்வதெல்லாம் உலக நன்மைக்காகவே என்று நம்புவதும் நாயக வழிபாடாக மாறிவிடுகிறது. புராண காலங்களிலிருந்து, செயற்கை நுண்ணறிவின் பிடியில் சிக்கி உழலும் இன்றைய நாள் வரை, இத்தகைய பிரமுகர்களை உயர்த்திப் பிடித்து, […]
பல்வழி தொடர்பு மையத்திலிருந்து நுண்ணறிவைப் பெறுவது எப்படி?
இன்று பல நிறுவனங்கள், அதிநவீன தொடர்பு மையங்களில் முதலீடு செய்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் – மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, இணையம் அல்லது சமூக ஊடகம் என எந்த வழியிலும் இந்த தொடர்பு மையங்களைத் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். படங்கள், காணொளி, ஒலித்துண்டுகள், செய்தித் துண்டுகள் என பல்வகைப்பட்ட தகவல்களை, எந்தவகை கட்டுப்பாடு, தரவரிசை ஒழுங்கு,கட்டமைப்பும் இல்லாமல் குவியல்களாகச் சேகரித்து வைத்திருக்கும் இந்த தகவல் களஞ்சியங்களிலிருந்து நமக்கு தேவைப்படும் தகவல்களைப் பெறுவது, […]
‘ஷெரி மடிகன்’ மற்றும் பல ஆய்வாளர்கள் 2019 நடத்திய ஒரு ஆய்வில், 2, 3 மற்றும் 5 வயதுடைய 2,441 குழந்தைகள் (50.2 சதவீதம் சிறுவர்கள் மற்றும் 49.8 சதவீதம் சிறுமிகள்) ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின் முடிவில், 8 வயதுக்கும் குறைவான அமெரிக்க குழந்தைகளில் 98% பேர் இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனம் உள்ள வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் சராசரியாக, அவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக திரைகளில் செலவிடுகிறார்கள்” என்றும் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பா, ஆசியா […]
அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]
மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது. ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , […]
பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3
முன் பகுதி சுருக்கம் அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள். … இனி இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு. பாட்டி வீடா இது […]
முன் பகுதி சுருக்கம் அமெரிக்காவில் இருந்து ஐஷு பாடி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். இனி .. இயல்பிலேயே ஐஷு ஒரு துறு துறு பெண். அதனாலேயே அந்த தூண் திடீரென்று பிளவு கொண்டு அதில் படிக்கட்டுகள் தெரிந்த போது பயம் இல்லாமல் அதில் காலை வைக்க முடிந்தது. வளைந்து வளைந்து சென்ற அந்தப் படிகளில் பழைய ஒட்டடைகள் இருந்தது. அதை […]

