\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கட்டுரை

பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

பனிப்பூக்கள் Bouquet – ஓமிக்ரான் பொங்கல்

  தமிழ் வருடங்களுக்கு விஷு, விளம்பி, பிலவ என்று பெயர் வைப்பது போல, இனி ஆங்கில வருடங்களை நினைவில் வைத்துக் கொள்ள, கோவிட்-19, டெல்டா, ஒமிக்ரான் போன்ற பெயர்கள் தேவைப்படும் போல இருக்கிறது. சூறாவளிக்கு விதவிதமாகப் பெயர் வைத்து கூப்பிடுவதைப் போல, வருடாவருடம் தொடர்ந்து வரும் கொரோனா வகைகளுக்கும் விதவிதமான பெயர்களைப் பல நாடுகளிலிருந்து பரிந்துரைக்கலாம். எப்படி 2005இல் வந்த சூறாவளியை கத்ரீனா என்ற பெயருக்காகவே நினைவில் வைத்திருக்கோம். அது போல, அழகான பெயர்களைச் சூட்டலாம். சூறாவளி […]

Continue Reading »

(பேச்சு) சுதந்திர இந்தியா

(பேச்சு) சுதந்திர இந்தியா

இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் பெற்றது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் என்று சொல்வீர்களானால் உங்கள் வரலாற்றைத் திருத்திக் கொள்வது நலம். 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள், அதாவது திரு. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற தினத்தன்று தான், இந்தியா சுதந்திரம் பெற்றது.  தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ராமசாமி முதலியார், ரோமேஷ் சந்தர் பட் , மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அனி பெசண்ட், […]

Continue Reading »

தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

தமிழ்நாட்டில் சிறார்கள் மீதான பாலியல் வன்முறை

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஏறத்தாழ 40,000 குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் 142 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரையில் 2,000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில், உயர் பள்ளி மாணவிகள் 2 பேரின் தற்கொலைக்குப் பிறகு பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொடர்பான விவாதங்கள் மீண்டும் […]

Continue Reading »

இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

இலங்கையில் அயல்நாடுகளின் ஆதிக்கம்

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து உலகெங்கும் பல உயிர்கள் இந்த நோய்க்குப் பலியாகின. உயிர்ச் சேதங்கள் மட்டுமின்றி பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாயின. குறிப்பாக அன்னியச் செலாவணி, சுற்றுலா வருவாய்களைப் பிரதானமாகக் கொண்ட நாடுகளின் பொருளாதார நிலை முற்றிலுமாக நசிந்து விட்டது என்பதே உண்மை. அத்தகைய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இடம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஏற்கனவே உள்நாட்டுப் போர், ஸ்திரமற்ற அரசுகள் என பல இன்னல்களைச் சந்திந்து மெதுவாக மீண்டு வந்து கொண்டிருந்த நாடு, […]

Continue Reading »

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மனிதத்தை மறைக்கும் மா’மத’ யானை

மதம் எனும் கட்டமைப்பு அல்லது முறைமை எப்போது தோன்றியது என்பது புதிராகவே உள்ளது. வரலாற்றைப் பார்க்கும் பொழுது ஞானிகள், குருமார்கள் ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை, இலக்கணத்தை வரையறுத்தார்கள் என்பதை அறிய முடிகிறதே தவிர, மதம் எனும் மூல நம்பிக்கை உருவானது எப்போது என்பது தெரியவில்லை. மனிதன் தோன்றிய நாள் முதலே மதமும் தோன்றியது என்று புதைபொருள் ஆய்வாளர்களும் மானிடவியல் ஆய்வாளர்களும் சொல்கின்றனர். இக்கருத்துக்கு ஆதரவாகவோ, முரணாகவோ அழுத்தமான ஆதாரங்களை இவர்களால் தர முடியவில்லை என்பதால் இன்றும் […]

Continue Reading »

இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு

இலங்கையின் பொருளாதாரம் நொடிக்கும் குண்டு

இலங்கை பொருளாதாரம், ஏற்கனவே அவ்விட விலைவாசி உயர்வாலும், வெளிநாட்டு வர்த்தகப் பரிமாற்றங்களுக்கும் பணப் புழக்கம் இல்லாதிருந்த நிலையில் கொரோணாவின் பாதிப்புகளால் மேலும் நொடிக்கும் குண்டாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய வங்கி வருமானம் வராதிருப்பினும் 2021 ஆக்டோபர் மாதம் மாத்திரம் $640 மில்லியனுக்கு ஈடான இலங்கை ரூபாய் 130 பில்லியன் ரூபாய்க்கு நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டது. இது அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையின் மிகச் சிறிய பகுதி மாத்திரமே. டிசம்பர் 2019 இல் இருந்து ஆகஸ்ட் 2021 வரை, […]

Continue Reading »

காற்றில் உலவும் கீதங்கள்

காற்றில் உலவும் கீதங்கள்

ரொம்பக் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு ‘காற்றில் உலவும் கீதங்கள்’ பகுதியுடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. 2020 மார்ச் மாதம் இதன் சென்ற பகுதி வெளிவந்தது. கொரோனா அறிமுகமாகி எல்லோருக்கும் பீதியைக் கிளப்பி, மொத்த ஊரையும் மூடத் தொடங்கிய சமயம் அது. அதன் பிறகு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்கள், பாடல்கள் வெளியாகாமல் மூடங்கிப்போனது.   ‘பாக்கு வெத்தல’  திரையரங்குகள் மூடத் தொடங்கிய அந்த இறுதி வாரத்தில் ‘தாராள பிரபு’ வெளியாகி இருந்தது. வெளிவந்த வேகத்தில் தியேட்டர்கள் […]

Continue Reading »

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் 2020

வேளாண் துறை தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு, செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசு தலைவர் இந்த மசோதாக்களுக்கு 2020 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்த பின்னர் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம் 2020 இதன் படி […]

Continue Reading »

பண்ணையில் ஒருநாள்

பண்ணையில் ஒருநாள்

”மாடு கண்ணு மேய்க்க, மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே”   என ‘சொர்க்கமே என்றாலும்’ பாடலைப் பாடியபடி அங்கலாய்த்துக்கொள்பவர்கள் சொல்லும் ஒரு விஷயம் – நம்மூரைப் போல ஆடு, மாடு போன்றவற்றை இங்கே அமெரிக்காவில் காண முடிகிறதா, தடவிக்கொடுக்க முடிகிறதா என்று தான். ஏன் முடியாது என்று சொல்லத்தான் இந்தப் பதிவு. அமெரிக்காவிலும் நகர்புறங்களைத் தாண்டு வெளியே சென்றோமானால், பெரும்பாலும் விவசாய நிலங்களைத் தான் காண முடியும். ஆடு, மாடு, குதிரை மேய்வதைப் பார்க்க முடியும். […]

Continue Reading »

அருவியில் கண்ணாமூச்சி

அருவியில் கண்ணாமூச்சி

ஆசியோலா என்ற சிற்றூரின் வெளிப்புறத்தில் ரயில் பயணத்தை முடித்துவிட்டு, ஊருக்குள் நுழைந்தால், ஒரு அமெரிக்கப் பூர்வக்குடி வீரனின் சிலையைக் காண முடியும். கம்பீரமாக நிற்கும் அந்த வீரனின் பக்கத்தில் கேஸ்கட் அருவி (Cascade falls) என்றொரு பலகையும் அதன் பக்கத்தில் கீழ் நோக்கி செல்லும் படிக்கட்டுகளுக்கான வழியும் இருக்கும். கீழே இறங்குவதற்கு முன்பு, அந்த வீரனைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆசியோலா என்றழைக்கப்பட்ட அந்த வீரனின் இயற்பெயர் பில்லி பாவல் (Billy Powell). 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad