கட்டுரை
நானோ பிளாஸ்டிக் எனும் அசுரன்
சமீபத்தில் ‘நானோ பிளாஸ்டிக்குகள்’ மனித உடலுக்குள் நுழைந்திருப்பதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று வழியாக மனித உடலுக்குள் நுழையும் இவ்வகை மிக நுண்ணிய (மீநுண்) பிளாஸ்டிக் துகள்கள் செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக இரத்த ஓட்டத்தில் கலந்து, உயிரணுக்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயற்கை இரசாயனங்களைப் பரப்புகின்றன என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். கொலம்பியா பல்கலை (நியு யார்க்) மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலை […]
சித்திரை வருடப் பிறப்பு
சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். தமிழில் சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் வரும் “ஏப்ரல்” மாதம் 14 ஆம் நாள் முதல் “மே” மாதம் 14 ஆம் நாள் வரை தமிழில் “சித்திரை” மாதமாகும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும் என்ற நம்பிக்கை காலங்காலமாக எம்மவரிடம் நிலவி வருவதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் […]
மனத்தை ஆண்ட லட்சுமி தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா (மார்ச் 2024)!
இரு நண்பர்கள் வலைச்செயலி மூலம் வெகு நாட்களுக்குப் பின்னர் உரையாடுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றாகப் படித்து, வேலை பார்த்துப் பின்னர் உலகத்தின் இரு வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வேரூன்றியவர்கள். பேச்சு அலுவலக வேலை, சினிமா, வீட்டுப் பராமரிப்பு முதலியவற்றைக் கடந்து குழந்தைகள், அவர்களுடைய படிப்பு ஆகியவற்றை நோக்கிச் செல்கிறது. “எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கு, ஆனா, பசங்க மெதுவாத் தமிழை மறந்திடுவாங்களோனு தோணுது.” “ஏன், உங்க ஊர்ல தமிழ்ப் பள்ளியோ இல்ல தமிழ்ச் சங்கம் மாதிரி அமைப்புகளோ இல்லியா?” […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
சென்ற பதிவில், பார்வையற்ற ஒர் இளைஞன், தனக்கு நெருக்கமான ஒரு பெண்ணின் அழகைத் தொட்டு, உணர்ந்து தான் கேள்விப்பட்ட பொருளோடு ஒப்புமை செய்த பாடலான ‘அழகே, அழகு’ பாடலைக் கண்டோம். ஒரு சாமான்யருக்கே காதல் வசப்பட்டவுடன், உலகமே அழகாக தோன்றத் துவங்கிவிடும்; பார்க்கும் பொருட்களை எல்லாம் இனிமை பொங்கிட, தனது காதலி/காதலனுடன் இணைத்துப் பார்க்கத் தூண்டும். ‘பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது; பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது’ என்ற நிலையே பொழுதெல்லாம் நீடிக்கும். இயற்கையின் படைப்புகளிலுள்ள அழகையெல்லாம் […]
வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்
“வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள்” பற்றிய வாசிப்பனுபவம் பற்றி உங்களுடன் சற்றுப் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். தலைப்பு கொஞ்சம் வில்லங்கமாகவும் விகாரமாகவும் தெரியலாம். கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் எழுதிய ஒரு கவிதை புத்தகத்தின் தலைப்பே இது. கவிஞர் வேணு தயாநிதி தற்போழுது மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகின்றார். இவரின் இந்தக் கவிதை நூல் 2023 டிசம்பரில் ‘யாவரும் பதிப்பகம்’ மூலம் வெளியானது. தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் வேணு தயாநிதி அவர்கள் இப்போது அமெரிக்காவில் […]
“உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” காதல் ரசம் சொட்டும் கவிதை நூல்.
2022 இல் YMCA மைதானத்தில் நடைபெற்ற 45வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிதாயினி சங்கரி சிவகணேசன் அவர்களின் “உன் நிலம் நோக்கி நகரும் மேகம்” எனும் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. எழிலினி பதிப்பகம் மூலம் வெளியான இந்தப் புத்தகத்தை, கடந்த மாதம் அமேசான் கிண்டலில் (Amazon Kindle) வாங்கிப் படித்தேன் அத்தனையும் காதல் ரசம் கொட்டும் கவிதைகள். நான் தமிழ் படித்த கலாநிதி, பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் முன்னுரையுடன் தொடங்கும் இந்த நூலுக்கு, முனைவர் பேராசிரியர் […]
உணவூட்டிகள் (Feeders)
உங்கள் தேன்குருவி உணவூட்டிகளை வெளிக் கொண்டு வரச் சிறந்த நேரம் இலைதுளிர்க் காலமாகும். இலைதுளிர் காலத்தில் புலம் பெயரும்போது தேன்குருவிகளுக்குச் சிறிய ஆற்றல் ஊக்கத்தை அளிப்பது ஆர்வலராகிய எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்கிழக்கில் தேன்குருவிகள்: வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரே ஒரு வகை தேன்குருவி உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். செம்மாணிக்க-தொண்டை தேன்குருவி – மற்றவை சில சமயங்களில் இலையுதிர் காலத்தில் இப்பகுதி வழியாக இடம் பெயர்கின்றன. ஃபிப்ரவரி மாதத்தின் கடைசிப் […]
திரைக் கவிஞர்கள் பார்வையில் அழகு
தமிழ்த் திரையிசையில் பிரதான இடம் பிடித்தவை காதல் பாடல்கள். நாயகன் – நாயகி இருவருக்குள்ளும் பிறந்த காதலை விளக்குவதற்குப் பெரிதும் துணை நின்றவை, இன்றும் நிற்பவை, பாடல்களே. ஒருவருக்கு ஒருவரைப் பிடிக்கப் பல காரணங்கள் உண்டென்றாலும் அந்தக் காரணங்களை எடுத்துச் சொல்வது, அதிலும் மெய்ப்பிக்கும் வகையில் சொல்வது மிகக் கடினமான விஷயம். ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை’ என்று எந்தக் காரணமும் இல்லாமல் மற்றவர் மீது ஏற்பட்ட காதலை, ஈர்ப்பைச் சொன்னது கண்ணதாசனின் சிந்தனைக்கோர் சிகரம். […]
எண்பதிலும் ஆசை வரும்
என்னது எண்பதில் ஆசையா? அது என்ன ஆசை? இந்தியாவில் ஐம்பத்தெட்டு அல்லது அறுபது வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து வளர்ந்த நமக்கு இந்தப் புதிய உலகம் வியப்பாக உள்ளது. நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று புரிந்திருக்கும் என நம்புகிறேன். வாருங்கள், இந்த வியப்பைப் பார்க்க உலகைச் சுற்றி வருவோம். அமெரிக்கா அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு எண்பத்தோரு வயதை எட்டுகிறார். அவருக்கு ஞாபக மறதி அதிகம் உள்ளது என […]
ஆரூர் பாஸ்கர் எழுதிய “வனநாயகன்’’ இது ஒரு சதிவலை
உலகில் எல்லோருடைய தலைகளுக்குள்ளும் நிறையக் கதைகள் தேங்கிக் கிடக்கின்றன, சிலர் அவற்றை அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து தங்கள் தலைப் பாரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர், இன்னும் பலர் அதை வெளியில் சொல்லத் தெரியாமல் அப்படியே தலைக்குள் குப்பையாகத் தேக்கி வைத்து தம்முடனேயே அதையும் புதைத்து விடுகின்றனர். இதில் நான் சொன்ன முதல்ரகம்தான் இந்த ‘வனநாயகன்’ நாவல், 2016 இல் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்த இந்த நாவலை இன்றுதான் வாசிக்கும் வாய்ப்பு பெற்றேன். இதை எழுதியவர் ஆரூர் பாஸ்கர், இவர் […]