கட்டுரை
தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அமெரிக்காவில் நன்றி நவிலல்
‘நன்றி நவிலல்’ (Thanks giving) என்பது அமெரிக்கர்கள் ஒன்று கூடி தங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம். நாம், தமிழ்க் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் இந்த நேசத்துக்குரிய விடுமுறையைச் சற்றே மாற்றியமைப்பதன் மூலம், நமது மரபுகள், சடங்குகள் மற்றும் மதிப்புகளுடன் இக்கொண்டாட்டத்தை வளப்படுத்தலாம். தமிழர் பண்பாட்டைப் பொறுத்தவரையில், கோலக் கலை, கர்நாடக இசை மற்றும் பல கலாச்சார விருந்துகள் போன்ற கூறுகளை இணைப்பது, எந்தவொரு விழாவின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் அதிகரிக்கும். இவை பலரும் ஒருங்கிணையும் சகிப்புத்தன்மையை […]
இலையுதிர்காலத்தின் வசீகரிக்கும் அழகைத் தழுவுதல்
வட அமெரிக்காவில் வண்ணங்கள் மற்றும் விறுவிறுப்பான காற்றின் இயைவான இன்பரசம் பெரும்பாலும் இயற்கையின் மகத்தான கோடைப் பருவத்தின் முடிவாகக் கருதப்படும் இலையுதிர்காலம், வண்ணங்களின் மயக்கும் காட்சி மற்றும் மிருதுவான, புத்துணர்ச்சியூட்டும் காற்றுடன் வட அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. இலைகள் சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்களின் துடிப்பான படலமாக மாறும்போது, கண்டம் ஒரு பிரமிப்பூட்டும் தலைசிறந்த படைப்புக்கான ஓவிய வரை திரையாக (Drawing Canvas) மாறுகிறது. இத்தருணத்தில் நாம் வட அமெரிக்காவில், குறிப்பாக மினசோட்டா மாநிலத்தில் அழகான […]
மரணிக்கும் மனிதம்
ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]
மணிப்பூர்
மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]
மனம் நாடும் மனித போக்குகள்
முன்னேற்றம் என்பது செய்பவை யாவற்றையும் துரிதமாக செய்தல்; இதற்கு இலத்திரனியல் Digital தொழில் நுட்பங்களை உபயோகித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. இவ்வகை நுட்பம் தெரியாவிட்டால், நாம் பின்தங்கி விட்டதாகவும் ஒரு சிந்தனை எம்மிடையே காணப்படுகிறது. நாம் மனிதர்; எமது சுபாவம், குணாதிசயம் இரண்டும் இணைந்து சமூகவியல் வாழ்வை அமைத்துக் கொள்வதே எங்கள் நோக்கம். அண்மைக்காலத்தில் எதையும் திறமையாக, துரிதமாக, இலத்திரனியல் மென்பொருளூடு செய்து முடித்து விடவேண்டும் என்ற உந்தல் இருந்து கொண்டே இருக்கிறது, இருந்தாலும் மனம் […]
பணிவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு
கல்லூரிப் படிப்பை முடித்து, பெருங் கனவுகளுடன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் காலெடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு உதவப்போகிறது. டோக்கியோ, யப்பானை தளமாகக் கொண்ட ஃபோரம் இன்ஜினியரிங் கிரேடுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பொருந்தக்கூடிய தன்மையை அளவிடுகிறது சென்ற நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் பயனாளிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, யப்பானைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. ஃபோரம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய […]
நாசாவின் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட மினசோட்டா மாணவர்
மினசோட்டாவைச் சார்ந்த மாணவரான ஜெர்விஸ் ரூவின் பெஞ்சமின், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்-நாசா (NASA) தொகுத்தளிக்கும் புவி அறிவியல் தரவுகளை ஆய்வு செய்யும் கோடைக்கால பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, நாசா, டெக்சாஸ் பல்கலைக்கழகத்துடன் (ஆஸ்டின்) இணைந்து நடத்தும் ‘புவி மற்றும் விண்ணியல் துறையில் மாணவர் மேம்பாடு’ (Student Enhancement in Earth and Space Science (SEES)) நடத்தும் விசேடப் பயிற்சியாகும். இப்பயிற்சியில், செயற்கைகோள் / சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாசா பெறும் தரவுகளை, மாணவர்கள் […]
அடுத்த மின்வலை இணையத்தை கற்பனை செய்தல்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக இணையம் பொதுமக்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்பத்தின் பின்னால் கொஞ்சம் மாறிவிட்டது, ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 1989 புரட்சிகளின் ஆண்டு. ஜேர்மனியில் சுவர் இடிந்து கொண்டிருந்த போது, டிம் பெர்னர்ஸ்-லீ என்ற மனிதனின் மனதில் மற்றொரு சரித்திரம் உருவாக்கும் வளர்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள புகழ்பெற்ற CERN அணு உலை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள பிரிட்டிஷ் இயற்பியலாளர், CERN இல் உள்ள பல்வேறு நிறுவனங்கள் […]
மடமையைக் கொளுத்துவோம்
ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதைப் போல இந்தாண்டும், மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஊடகங்களில், தாய், தமக்கை, தங்கை, மனைவி, மகள் என தத்தம் வாழ்வில் சந்தித்த அனைத்துப் பெண்களுக்கும் விதவிதமான வடிவில் வாழ்த்துகளைச் சொல்லித் தீர்த்தனர். மறுதினமே, தன் மனைவியை சிலாகித்துப் பேசும் கணவனிடம் ‘யோவ், நேத்தே வுமன்ஸ் டே முடிஞ்சி போச்சு..’ என்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்வதான ‘மீம்ஸ்’ வெளிவந்து ‘லைக்ஸ்களை’ அள்ளியது. வேடிக்கையாகயிருந்தாலும் இது தான் […]
வீழும் வங்கிகள்
அண்மையில் பெரு வங்கிகள் சில நொடித்து, திவால் நிலைக்குத் தள்ளப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. பொதுவாகப் பங்கு வர்த்தகம், பத்திரங்கள், வீடு / மனை போன்ற அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்குப் பொருள், அனுபவமில்லாத இல்லாத மக்கள் இருப்பதைப் பாதுகாப்பாக வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்காகவும், வங்கிகளில் சேமிப்பதுண்டு. அத்தகையோரது நம்பிக்கைகளை அசைத்துள்ளது தொடர்ந்து நிகழும் வங்கிகளின் வீழ்ச்சி. அமெரிக்காவில் இதற்கு முன்பும் சில தனியார் வங்கிகள் திவாலானதுண்டு. ஆனால் ஏற்கனவே மந்தநிலை நோக்கி நகர்ந்து வரும் அமெரிக்கப் […]