கவிதை
மாறி வரும் மரபுகள் – தேவவிரதன்

காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்றான் ஓர் கவிஞன் கவிதைக்குப் பொய் அழகு என்றான் இன்னொரு புலவன் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒருவர் இன்று அந்த உறவு கடல் கடந்து போய் விட்டது கணினித் தொடர்புடன் இந்தியாவின் இதயம் கிராமங்களில் என்றார் ஒரு கிழவர் அந்த இதயத்தை விட்டு நகர்ந்து வருபவர்தான் இன்று நான் காணும் தலைமுறை மனதை ஒருமிக்க மதம் என்றனர் ஆன்றோர் ஆனால், மதத்தின் பெயரால் மதம் பிடித்து […]
அறிவுள்ள காகம் !

காகம் ஒன்று பறந்து திரிந்தது
கோடை வெயில் தீயாகச் சுட்டது
தாகம் தீர்க்க அலைந்து வாடியது
காகம் குடிநீருக்காகத் தவித்தது !
குளம் குட்டையெல்லாம் சுற்றியது
களைப்பில் மரத்தில் நின்றது
எல்லாமே வறண்டு கிடந்தது
தாகம் தீர்க்கத் தண்ணீர் எங்கே ?
இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!

இன்றிருக்கும் இளைஞருக்கு ஈடில்லா அவசரம்.. இல்ல மொன்றிருப்பதை யுமறவே மறந்தனர்.! என்றும் மெல்லத் தூங்கியே எழுவர்…எழுந்தபின்.. வெல்லத்தான் நினைப்பார் எதையும் எளிதில்,! ஒருவரியில் முழுவதையும் படிப்பதிலே அவசரம்.! படித்து முடிப்பதற்குள் படுக்கச்செல்ல அவசரம்.! பருவம் வருமுன்னே பாழுங்காதலிலும் அவசரம்.! பணிசெய்யும் இடத்திலே பதவிக்கும் அவசரம்.! சிட்டாகப் பறக்க வேண்டுமெனும் எண்ணம்.. எந்நாளும் வேண்டா மெனும்நிலை வேண்டும்.! மொட்டாகும் முன்னே பூப்பூக்க நினைத்தால்.. பூவுலகில் எல்லாமே தலைகீழாய் மாறிடாதோ.! கட்டான இளைஞரின் கட்டுக்கடங்கா வேகமது.. காதல் கனிந்திருக்கும் வரைப் […]
கவித்துளி

கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]
தாய்நாடு திரும்புவாய்..!.செல்லமகனே..!

எந்தன் தாயுன்னைத் தேடுகிறாள்
—-எங்கே சென்றாய் செல்லமகனே..!
தாய் நாட்டில் கல்வியறிவுபெற்று..
—-அயல் மண்ணில் பணியாற்றவா..!
இயந்திரமாய் எளிதில் பொருளீட்ட..
—-இயல் புக்கெதிராய் மாறினாயோ..!
நீவளர்ந்த ஊரிங்கே நித்தம்..
மீண்டு(ம்) வரும் சுதந்திரம்

விண்ணோர் போற்றிடும் வகைவாழ்ந்து
வியத்தகு சாத்திரம் பல படைத்து
மண்ணோர் வாழ்நெறி வரையறுத்த
மதிநிறை மக்கள் வாழ்ந்திட்ட தேசமிது!!
பல்லாயிரம் ஆண்டுகள் முன்னமேயே
சொல்லால் செயலால் நிலையுணர்ந்து
பொல்லாதது செய்யாது வாழ்ந்திருந்து
வெல்லாத துறையில்லாதிருந்த தேசமிது !
மோகத்தைக் கொன்றுவிடு !!

ஆயிரம் படித்தும் ஆவது அறிந்தும்
ஆலயம் புகுந்தும் ஆன்மிகம் உணர்ந்தும்
ஆசையை மனதில் ஆறாது செய்வது
ஆண்களின் வாழ்வில் ஆகாத செயலோ?
காணுமிடம் எங்கெங்கும் கன்னியரின் கோலம்
காட்சிப் பிழையோ இல்லை கருத்துப்பிழையோ?
காலங் கடப்பினும் கருவளையம் தோன்றிடினும்
காமக் களிப்பது கருத்துவிட்டு அகலாததேனோ?
அ முதல் ஃ வரை …!

அ- அதிசயிக்க மறந்துவிட்டேன் அதிசயமே நீ என்பதால் ஆ- ஆர்ப்பரிக்க மறந்துவிட்டேன் அலைகடல் நீ என்பதால் இ- இரவை ரசிக்க மறந்துவிட்டேன் என் நிலவே நீ என்பதால் ஈ – ஈகை செய்ய மறந்து விட்டேன் ஈகையின் இருப்பிடம் நீ என்பதால் உ- உலகைக் காண மறந்துவிட்டேன் என் உலகமே நீ என்பதால் ஊ- ஊஞ்சலில் ஆட மறந்துவிட்டேன் என் தென்றல் நீ என்பதால் எ- எழுதுகோலைப் பிடிக்க மறந்துவிட்டேன் என் இறகு நீ என்பதால் ஏ- […]
கவிதையாய் நீ ….!!

சேமித்த காதலின் சிதறல்களாய் நீ …. கண்ணீர்க் குவளைகளின் கதறல்களாய் நீ …. எண்ண ஓட்டத்தின் சிறகுகளாய் நீ …. நினைவு அலைகளின் சின்னமாய் நீ …. ஆசைக் கடலின் ஓடமாய் நீ … கனவு ஆலையின் உறைவிடமாய் நீ….. கற்பனை ஊற்றின் பிம்பமாய் நீ ….. என்றுமே எந்தன் காதலாய் நீ ….!! – உமையாள்
கவிதைக்காக கவிதை

பரவசத்தில் தோன்றுமதைப் பற்பல எண்ணங்களோடு பக்குவமாய் ஒப்பிட்டு இயல்பாகவெழுதுவதே கவிதை! கவிதையென நினைத்து கனவில் தோன்றுவதையெலாம் யாருக்கும் புரியாமல் பாருக்குமொழிவதல்ல கவிதை..! முழுதும் படித்தாலும் முடிந்தவரை முயன்றாலும்-‑_ புரியாத கருத்தைப்பலர் அறியாதசந்தமென எழுதுகின்றார்..! அடுக்கான வார்த்தைகளை மிடுக்காக ஒன்றருகிலொன்றாக அள்ளியடுக்கி வைத்ததினாலன்றி அருங் கவிதையாகிவிடுமா?.. உலகிலில் அனைத்துக்குமோர் உருவமுண்டு…அதுபோல அகரமுதல எழுத்தனைத்துக்கும் அழகான கவிதைவடிவமுண்டு எதுகைமோனை நயத்தோடிசைபோல எளிதாய்விளங்கும் பொருளோடு சிந்தனைஊற்றில் பெருக்கெடுத்து சிறப்பாயெழுவதே கவிதையாகும் இயல்பாகவெழும் சிந்தனையோடு இறையருள் கொண்ட எழுத்தின் எழுச்சியேயொரு செந்தமிழ்க்கவிதையின் சிறப்பாகும்! […]