கவிதை
சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்

கலங்கிய காளை கழனியிலும் வேலையில்லை களத்தினிலும் பணியுமில்லை கணினிகளைத் தாம் நோக்கி காளையர்கள் போனதனால் கண் கலங்கிய காளை! களத்து மேட்டிலும் வேலையில்லை கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை கரிசல் காட்டை விலைபேசிய காட்டுமிராண்டிகள் கண் கலங்கிய காளை! கட்டித் தழுவுவார் யாருமில்லை கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை கார்மேகமும் கை கொடுக்கவில்லை கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா கண் கலங்கிய காளை! திரைகடலெனத் திரண்ட தமிழினம் திக்கெட்டும் ஒரே இசை ! என் தமிழனின் பறை இசையடா ! […]
காதல் விளம்பல்கள்

காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]
தலைமுறைகள் …?

கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]
கல்லறை பேசுகிறது

அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]
பொங்கலோ பொங்கல்

பொழுது சாயும் நேரத்துலே பொதுவான சாலை ஓரத்திலே பொசுங்கும் குப்பைக் கூளமுமே போகி வந்ததென அறிவிக்குமே !! குப்பைக் காகிதம் மத்தியிலே குறுகிய எண்ணக் கசடுகளும் குன்றத் தோன்றிய சுயநலமும் கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !! மறுநாள் காலை வைகறையில் மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை மனதில் நினைந்து வழிபடவே மாநிலம் முழுதும் கூடினரே !! முற்றம் நடுவினில் பானைவைத்தே முனைந்து சுற்றிய மஞ்சளுமே முழுதாய் நிறுத்திய கரும்புடனே மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !! கழனி காடு […]
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!

வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
ஓசோன் துளை

புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
ஏ புள்ள……!!!

கஞ்சிக் கலயம் கொண்டு கடைக்கண்ணால் எனைக் கட்டி இழுத்துக் கொண்டு களத்து மேட்டில் நடந்து வயக்காட்டுப் பக்கம் போற புள்ள ….! கட்டழகு மேனியால் இந்த மாமன் மனதை களவாடியவளே வழியில் கள்ளர் பயமிருந்தால் சொல்லு புள்ள கள்ளழகராய் ; கட்டிளங் காளையாக வழித் துணையாக நானும் வாறேன் புள்ள …! கண்ணாலே கதை பேசி கயவரைக் காலால் புறந்தள்ளிவிட்டு கண் நெறஞ்ச மச்சானைக் கண்ணுக்குள்ளே பூட்டி வைச்சு….. கருமேகக் கூட்டம் வருமுன்னே விரசா வீடு வந்து […]
அட்சய பாத்திரம்

எண்ணங்கள் நினைவுகள்
கற்பனைகள் கவலைகள்
காதல்கள் மோதல்கள்
பழக்கங்கள் வழக்கங்கள்
சிந்தனைகள் சிரிப்புகள்
உறவுகள் பிரிவுகள்
காத்திருப்பு

காத்திருப்பு சுகமானது காதலில்
காதலியின் வரவை எதிர்பார்த்துக் காதலனும்
காதலனுக்காக அவளும் காத்திருப்பாள்
கருவாச்சி மனதினுள் பொங்கிடுவாள்….!
கட்டிய கணவனைக் கனிவோடு வரவேற்றிட
கட்டைவிரலால் கோலமிட்டே வாசலிலே நின்றிடுவாள்