\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

ஏண்டியம்மா எங்க போற?

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 2 Comments
ஏண்டியம்மா எங்க போற?

வயக்காட்டில உழைச்சுக் களைச்ச
மாமன் மனசை விரசாப் போயி
முந்தானையில் அள்ளி முடிய
முந்திட்டுப் போறியோ….

ஏக்கங்களை நெஞ்சில் வச்சு
எட்டி நின்னு பார்த்த பொண்ணு
மாமன் கையில் தாலி வாங்க
துள்ளிக் குதிச்சு போறியோ…

Continue Reading »

கவிதைக் கண்கள் !

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 0 Comments
கவிதைக் கண்கள் !

உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !

என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !

Continue Reading »

கற்கை நன்றே !!

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 1 Comment
கற்கை நன்றே !!

பொட்டல் காடெல்லாம் புழுதியாப் பறக்குது
நட்டநடு வீட்டடுப்பில் நாய்பூனை தூங்குது
கட்டடம் கழனியெல்லாம் கனவுபோல மறையுது
பட்டமரம் போலவெங்கும் பஞ்சமாத் தெரியுது…..

Continue Reading »

பாதச்சுவடுகள் !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
பாதச்சுவடுகள் !

ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !

Continue Reading »

எது பிரதானம்?

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
எது பிரதானம்?

எண் சாண் வயிறுக்கு சிரசே பிரதானம் !!

சொல்லக் கேட்டிருப்பீர், ஆழ்ந்து சிந்தித்ததுண்டோ?
சிரசே பிரதானமோ, சீரிய பேச்சிதுவோ?

சுட்டெரிக்கும் வெய்யிலிலே, சுகம் கருதா வாழ்வினிலே
பட்ட துயரனைத்தும் பாழும் வயிற்றினாலிலையோ?

தற்குறிப் பாமரர்களையும் தானேற்ற பதவிகளால்
திறமைமிகு பண்டிதரும் துதிபாட வைத்திலையோ?

Continue Reading »

காதல் கொண்டேனடி !

Filed in இலக்கியம், கவிதை by on July 31, 2016 0 Comments
காதல் கொண்டேனடி !

நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று

நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்

Continue Reading »

சாலையோர அனாதையாய் நான்

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2016 0 Comments
சாலையோர அனாதையாய் நான்

கண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!

Continue Reading »

கவித்துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2016 0 Comments
கவித்துளிகள்

தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் …
முதலாய் வெட்கப்பட்ட
பெண் !

தன்னுள் பெண்மையை
உணர்ந்தாள் ….
முதலாய் காதல் வயப்பட்ட
பெண் !

Continue Reading »

சுதந்திர தேவி

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2016 0 Comments
சுதந்திர தேவி

ஆரவார மில்லா அட்சன் ஆற்றில்
ஆர்பாட்டா மில்லா அலைகள் நடுவே
அகிலம் போற்றும் விடுதலைச் சின்னமாய்
அகவை மறுத்து நிற்கிறாள் அந்நங்கை.

ஆணவமிகு ஆதிக்க ஆட்சியாளர் ஒழிந்திட
ஆற்றல்மிகு ஆதவனின்கீழ் அனைவரும் சமமெனும்
ஆவணமதை ஒருகையிலும் அடிமையிருளைப் போக்கிட
ஆழிகாற்றும் அணைக்காவிளக்கை மறுகையிலும் ஏந்தியிருப்பாள்.

Continue Reading »

கவித்துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on May 29, 2016 0 Comments
கவித்துளிகள்

ஜன்னலின் சத்தங்கள்

கவனமற்று எதிர்நோக்கும்
அன்றைய ஒலியின்
ஆறாத் தனத்தின்
அலம்பலைக் கடக்க
வழி வேண்டா, மனம் வேண்டா
கடவுளின் அடி வயிற்று
வழியெனத் திறந்து கொண்டே
நகர்கிறது,

Continue Reading »

ad banner
Bottom Sml Ad