கவிதை
மூன்றெழுத்து

மூன்றெழுத்துச் சொல் அந்தச் சொல் காட்டிய நல்ல பாதையிலே நம்மவர் வாழ்க்கையே ஓடிக் கொண்டேயிருக்கிறது ! முழுநிலவின் ஒளியில் புத்துயிர் புத்துணர்வு பெறுவது போல. ஆடும் மயில்கள் பாடும் குயில்கள் பரவசம் அடைவதுபோல் ! அந்தச் சொல்லில்தான் அகிலமும் சுழல்கிறது இயற்கையும் செயற்கையும் கைகோர்த்துச் செல்கிறது ! இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்தி வேளையில் அந்தச் சொல்லை நாமும் உணரமுடியும்! மதங்களும் சாதிகளும் அந்தச் சொல்லைத் தாங்கிக் கொண்டுதான் ஒற்றுமையாக இருக்கின்றன ! அந்தச் சொல் […]
சித்திரைத் திருமகள்

மானொத்த விழியாளின் மருகிய பார்வையும்
மாலையற்ற கழுத்தும் மலரில்லாக் கூந்தலும்
மாநிறச் சருமமும் மயக்குகின்ற விழிகளும்
மாலைச் சூரியனாய் மலர்ந்ததந்த வதனமும்
மாண்புமிகு நெற்றியின் மத்தியிலிட்ட சுடரும்
மாங்கனியாய்க் குவிந்த மதுததும்பும் அதரமும்
மாறனின் கணைகளுக்கு மடுவான நாசியும்
மாரிக்கால வருடலாய் மந்தகாசத் தோற்றமும்
கவித்துளிகள்

பிறந்த வீட்டில் ராணியாகவும்
புகுந்த வீட்டில் ஏணியாகவும்
வலம் வருகின்ற பாங்கினை
எங்கு கற்றாயடி !
வாழ்ந்த வீட்டிற்கும்
வாழவந்த வீட்டிற்குமான
இயற்கைச் சீற்றங்களைத்
தென்றலாக மாற்றிடும் சூட்சுமத்தை
எங்கு கற்றாயடி !
தாவணிக் கனவுகளைத் தரிசாக்கி
மனிதனாக இரு !

சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை.
இரவில்
சுடர் விடும்
மின் மினிப் பூச்சிகளைக்
கொன்று குவிக்காதே !
பள்ளி செல்ல
மனமில்லையா ?
மறதிக்குப் பின் வருவதே மரணம்

படுத்த படுக்கையாகி
விட்டேன்
மௌனமாய் உணர்கிறேன்…
திரும்ப முடியாமல்
படுத்தேயிருப்பதால்
முதுகெல்லாம் புண்கள்
ஒப்புக் கொள்கிறேன்…
தமிழ்ப் புத்தாண்டு

சித்திரைத் திருமகள் சிறப்புடனே வருகிறாள்
சீராட்டிப் பாராட்டிச் செழிப்பூட்ட வருகிறாள்
சிந்தனைச் சிற்பிகளைச் சிரந்தூக்கிச் செறுக்கேற்றி
சீலமாய் வாழ்பவரைச் செழுமையுடன் வைத்திடுவாள் !!
கத்திரி வெயிலிலே கழனியில் உழைப்பவரை
காரிருள் நேரத்திலும் களத்துமேடு காப்பவரை
கனத்த மழையினிலும் கடுந்தொழில் புரிபவரை
காத்திடுக இயற்கையெனக் கைகூப்பி அழைக்கிறாள் !
வேலையில்லாப் பட்டதாரி !

நான்
அருகே சென்றாலும்
கடல் அலைகள்
என் பாதங்களை
முத்தமிடாமல்
செல்லுகின்றன !
என்
கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது
என் மனமோ
ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றது !
ஆணவம் கொ(ல்)ள்வோம்

உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !
காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !
மழைப்பாட்டு

பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த பதமழையின் வாசம் அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து வழுக்கேறிய வண்டல் மண்ணை பதப்படுத்தத் தொடங்குகிறது தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து அவன் இசைக்கத் தொடங்குகிறான் அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு […]