\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

மழைப்பாட்டு

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 1 Comment
மழைப்பாட்டு

பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த பதமழையின் வாசம் அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து வழுக்கேறிய வண்டல் மண்ணை பதப்படுத்தத் தொடங்குகிறது தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து அவன் இசைக்கத் தொடங்குகிறான் அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு […]

Continue Reading »

இதழ்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
இதழ்

உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!

உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!

Continue Reading »

கன்னியும் காதலியும் !

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
கன்னியும் காதலியும் !

கருணை இல்லாத
காட்டுமிராண்டி
நாட்டுக்குள்ளே
புகுந்தது போல்
விம்மி நிற்கும்
விரதாபம் !

உள்ளே பதுங்கும்
வெண்புலியாய்
அவனது
விரகதாபம் !

Continue Reading »

சென்ரியு கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
சென்ரியு கவிதைகள்

கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்

Continue Reading »

கவித் துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments
கவித் துளிகள்

மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ….
அவளின் இதழ் மடல்கள் !!!

இதழில் உழன்று
மயங்குகிறேன் ….
அவள் மடல் விரிக்கையில்
நான் வீழ்கிறேனே ….
எழ மனமின்றி!!!

Continue Reading »

மறவாத அந்த நாள் !

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments
மறவாத அந்த நாள் !

அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !

மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !

Continue Reading »

புத்தக மூட்டை

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 4 Comments
புத்தக மூட்டை

” அம்மா வலிக்குதே …”

பச்சிளம் குழந்தையாக இருந்தேன்
பார்த்துப் பார்த்து வளர்த்தாய்
மூன்று வயது ஆனேன் என்
முதுகில் சுமையை ஏற்றி வைத்தாய்

பள்ளிப் பாடங்கள், புத்தகங்கள் என்றாய்
பளுவை ஏற்றிக்கொண்டே போனாய்
வலிக்குதே அம்மா என்றேன் வழியெல்லாம்
பழகி விடு என்று ஏற்றாய் என் பழியெல்லாம்

Continue Reading »

ஆதாம் ஏவாள்

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 0 Comments
ஆதாம் ஏவாள்

அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…

வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…

Continue Reading »

மழலை

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 1 Comment
மழலை

நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !

பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !

Continue Reading »

மழைத் துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on December 28, 2015 0 Comments
மழைத் துளிகள்

மழையின் கேள்வி !!!

விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!

மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?

Continue Reading »

ad banner
Bottom Sml Ad