\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

குருவிச்சி ஆறு

Filed in இலக்கியம், கவிதை by on July 28, 2015 0 Comments
குருவிச்சி ஆறு

இது எங்கள் கிராமத்தின் இதய நாடி.
மாரியிலே ஊர் மூழ்கும்போது வடிகாலாய்
கோடையிலே எம் பயிர் வாடும்போது
உயிர் ஊற்றாய்
மாரிச் சொத சொதப்பில் காலுன்ற முடியாமல்
கோடிவரை வரத் துடிக்கும்
கொடு விலங்குக் கூட்டத்தை
அகழியாய் விரிந்துநின்று
ஊர் காக்கும் காவலனாய்,
எம் ஊரின் முகமாய்.முகவரியாய்

Continue Reading »

கைப்பேசிக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on July 28, 2015 0 Comments
கைப்பேசிக் காதல்

முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?

Continue Reading »

அழியும் மானுடம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
அழியும் மானுடம்

உயிரினம் அனைத்தும் ஒப்பிட்டு நோக்கின்
உயரினம் எம்மினமென ஓலமிடும் மானிடா!
தன்னினம் அழித்துத் தரித்திரம் சமைக்கும்
தனியினம் மனிதயினம் மட்டும் தானடா!
பழிக்குப் பழியெனப் பகைதனைத் தீர்த்து
பசியாறிப் புசித்திடும் முரட்டுக் கூட்டமடா!
விழிக்கு விழியென வீம்புடன் வாழ்ந்து
விடியலைத் தேடிடும் குருட்டுக் கும்பலடா!

Continue Reading »

நேர்மைக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
நேர்மைக் காதல்

கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.

அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…

Continue Reading »

இது கவியல்ல நிஜம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
இது கவியல்ல நிஜம்

வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம்   மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக்  கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ   சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் […]

Continue Reading »

எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 1 Comment
எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

நாடாரு கடையதிலே
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….

நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…

Continue Reading »

காணாமல் போன வாழ்வு

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments
காணாமல் போன வாழ்வு

இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி

Continue Reading »

மழலைதரும் மதுபோதை

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments
மழலைதரும் மதுபோதை

உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்

முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்
முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்

பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்

Continue Reading »

வசீகர வஞ்சி

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 2 Comments
வசீகர வஞ்சி

கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து

Continue Reading »

மறை நூலில் இறை வாக்கு

Filed in இலக்கியம், கவிதை by on March 30, 2015 0 Comments
மறை நூலில் இறை வாக்கு

புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு   –    ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்

Continue Reading »

ad banner
Bottom Sml Ad