கவிதை
காதலும் காமமும்

காதல்
கட்டிய சேலை சற்றே விலகினால்
காதில் சொல்லித் திருத்தச் செய்யும்!
காமம்
கண்ணில் கண்ட பெண்களை எல்லாம்
காந்தர்வமாய் துகில் உரிந்து மெல்லும்!
மினியா போலிசு குளிர் – ஈரோடு தமிழன்பன்

சூரியன் ஈரத்தில் சொதசொதத்து
ஊருக்குள் நுழைகிறான்
பறவைகளின் கனவுகளுக்குள்ளோ
பாடல்களுக்குள்ளோ
வெப்பமான ஓரிடம் கிடைக்குமோ?
தீபாவளி வாழ்த்து

சலசலவென நீரில் குளித்து
பளபளவென புத்தாடையில் சொலித்து
கமகமவென உணவைச் சமைத்து
பலப்பல நண்பர்களை அழைத்து
வாழிய மகாத்மா

சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?
சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?
சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?
நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?
நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?
நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?
கண்ணிவெடிப் பூமியிலே

அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்
ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…
வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்
வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்
பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…
வறுமை

இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
பெற்றதும் இழந்ததும்

உயர் வடையவே உறவினை இழந்தேன்
உடமை பெறவே உரிமை இழந்தேன்
பொருண்மை சேர்க்கப் பொறுமை யிழந்தேன்
பெறுமதி பெறவே பெருமை யிழந்தேன்.
நகரமும்! கிராமமும்!

அடுக்கு மாடி கட்டிடமாம் இடுக்கில் கூட குடித்தனமாம்! மடக்கு நீருக்கு வழியில்லையாம். மிடுக்கு மட்டும் குறையலையாம்! பஞ்சு மெத்தை வகைவகையாம் படுத் துறங்க நேரமில்லையாம்! பல்லு துலக்க பலபசையாம். பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்! உரசாம நடக்க முடியலையாம் உரையாடு வதற்குத் துணையில்லையாம் உதவிக் கொரு ஆளில்லையாம் உறவுக் கூட நிலைக்கலையாம்! அழகு ஏடிஎம் அணிவரிசையாம் அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்! அலைபேசி இருபதாயிரம் விலையாம். அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம். அருகம் புல்லுக்கு இடமில்லையாம் அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்! […]
கவித்துளிகள் சில…

அமாவாசை
சிதறிய நட்சத்திரங்களுக்குள்
செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.
கையடக்கத் தொலைபேசி
சட்டைப் பையில் பதுங்கியிருந்து
பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…
ஏன் கடவுளே?

கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…