கவிதை
பெண்

விடியலின் கதிராய், வெள்ளியின் குளிராய்
விளக்கின் ஒளியாய், வெண்சங்கின் ஒலியாய்
விருட்சத்தின் விதையாய் வேள்வியின் பயனாய்
வினையிருக்கும் அவளிடத்தில் வீச்சிருக்கும்!
பனிக்கோலம்

சீவ நதி வற்றி போகும் – வறட்சி இல்லை
பட்ட மரம் மலர் சொரியும் – மாயம் இல்லை
துளையிட்டு மீன் பிடிப்போம் – பசியும் இல்லை
ஒல்லியனும் குண்டாவான் – கொழுப்பும் இல்லை
கனவு மெய்ப்பட வேண்டும்

உழுவோர் ஊணுண்டு செருக்குற
நிலமிது வளம்பெற வேண்டும்!
உழைப்போர் உரிமையுடன் ஓய்வுற
நிலவது வசப்பட வேண்டும்!
தவிப்போர் தாகம் தீர்த்திட
தடையறு தண்ணீர் வேண்டும்!
அணைப்போர் அணைந்தே ஒழிந்திட
அடைமழை பொழிந்திட வேண்டும்!
ஒரு ஈழத் தாயின் இன்றைய தாலாட்டு

ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைஞ்சான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
தமிழ்ப் பாடல்

வள்ளுவன் என்றோர் வரகவி வந்து
வாழ்வியல் நெறிகளைத் தரமுடன் தந்து
துள்ளும் தமிழின் நடையதை உணர்ந்து
தூய்மை நிரம்பும் மொழியாய்ச் செய்தான்!!
இளங்கோ என்பவன் பின்வந்து உதித்து
ஈர்க்கும் சிலம்பெனும் காவியம் படைத்து