கவிதை
இதுவா வாழ்க்கை?

தொலைக்காட்சிப் பெட்டிநம்மின் வீட்டிற் குள்ளே தொகைகொடுக்க வந்தபின்னே புத்த கங்கள் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்தி விட்டோம் வீற்றிருந்து படிப்பதையும் விட்டு விட்டோம் ! அலைபேசி நம்கைக்கு வந்த பின்போ அழகான கையெழுத்தில் நலங்கள் கேட்டுக் கலையாக எழுதிவந்த கடித மெல்லாம் காணாமல் போனதுவே கையை விட்டே ! பொன்னாக மேசையின்மேல் கணினி வந்தே பொலிவாக […]
காதல் தோல்வி

காலையில் எழுந்ததும்.. கன்னியின் நினைவு.. காலம்பல கடந்தும் கருமையின் அதிர்வு கால்கள் அனிச்சையாய்க் கழிவறை அடைந்ததும் காத்து வைத்திருந்த, கசங்கிய புகைப்படம் ரகசியமாய் எடுத்து ஒருமுறை ரசித்ததும் ரதியவளின் சிரிப்பு கசங்கலின் மத்தியில் ரணங்களைக் குணமாக்கும் வெண்ணிறப் பற்கள் ரகமான வரிசையில் ரசனையுடன் நடமாடியது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் ஒருத்திக்காகவே உயிர் வாழ்ந்த உண்மை ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு உணர்வும் ஒருத்தியோடு இணைந்து உயர்ந்த பெருமை! மிதிவண்டி ஏறி மின்னலெனப் பறப்பவன் […]
மை பூச ….

அஞ்சு வருசத்துக்கு ஒரு வாட்டி கெஞ்சிக் கூத்தாடி வருவாண்டி…… கொஞ்சிப் பேசித் தலையாட்டி வஞ்சிக்க வழிபாத்து நிப்பாண்டி…… கையக் காலைப் புடிச்சுத்தான் பொய்யப் புளுகைச் சொல்வாண்டி செய்ய முடியாச் செயலெல்லாம் மெய்யா நடக்கும்னு விடுவாண்டி …… மானங் கெட்ட பொழப்பாலே போன வருசம் அடிச்ச கொள்ளை தானப் பிரபுவாத் தான் மாறி வானம் வழியாக் கொடுப்பாண்டி …. தண்ணி நீஞ்சும் மீன் புடிக்க பண்ணி வைச்ச புழுவதுடி….. கண்ணி வச்சு மான் புடிக்க பின்னிப் பிணைஞ்ச வலையதுடி […]
கயமைக்குக் கல்லடி

கடவுளரைப் பழித்திடும் கருங்காலிக் கூட்டமது கண்ணியம் இன்றியே குரைப்பதும் தொடர்ந்திடுது கைகளில் ஒலிப்பெருக்கி கைதட்டச் சிறுகூட்டம் கண்ணனின் லீலைகளைக் காலித்தனமாய்ப் பேசியது! கருத்துத் தெளிவாய்க் கைகுவித்துக் கேட்டிட்டால் கருணை பலகொண்டு கனிவாய் விளக்கிட கடுந்தவம் புரிந்து கைங்கரியம் பலசெய்த கடவுள்நிகர்ப் பெரியோர் கண்டம் முழுதுமுண்டு!! கலகம் விளைவித்தால் கல்லா நிறையுமென்றும் கண்மூடித் தாக்கிட்டால் கனகம் கிடைக்குமென்றும் கடவுளரை ஏசிட்டால் கணக்கின்றிக் கொட்டுமென்றும் காசொன்றே குறிக்கோளான கயவர்களை நிராகரிப்போம்! கயவான சொல்லதற்குக் கருத்தாய் மறுப்புண்டோ கதிகலங்கி நின்று கண்ணீர்விடும் […]
நாட்குறிப்பிடம் தோற்றுப்போனவன்

ஏதோ ஒரு நிறுவனத்தின் இலவசப் பரிசாக அவனிடம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வந்து சேர்ந்த நாட்குறிப்பு நான் ! புதிதாய்ப் பரவசத்துடன் என்னைக் கையிலெடுத்தப்போது என்னுள் அவன் உதிர்த்த உறுதிமொழிகளை அடிக்கடி நினைவூட்டியபடிதான் இருக்கிறேன் ! எழுதப்பட்டிருந்த வரிகளில் அவனது கடந்த காலத்தை காட்டிக் கொண்டிருக்கிறேன் என்றே என்னைப்பற்றி அவன் எண்ணுவதுண்டு ! ஏனோ அவனுக்கு வருவாயை வங்கியிலும் வாழ்க்கையை எனக்குள்ளும் சேமிக்கத் தெரியவேயில்லை ! அன்றாடமில்லை என்றாலும் என்றோ சில நாட்களில் எழுத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தேன் நான் […]
நான் நானில்லை

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான்! வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான்! என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை! ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும்! நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! – ருக்மணி
ஆச்சர்யக்குறிகள்

கேள்விக்குறிகளான மெய்யை ஆச்சர்யக் குறிகளாக்கும் மாற்றுத்திறனாளிகளே! திறமைகளின் குவியலே! தன்னம்பிக்கையின் உருவமே! விழிகள் செயலிழந்தவர்களே! உங்கள் வாழ்க்கை விழி திறந்து படிக்கப்பட வேண்டிய பாடம்! கைகள் இழந்தவர்களே! தன்னம்பிக்கை தந்திடும் உங்களின் போராட்ட வாழ்க்கை! செவித்திறன் இழந்தவர்களே! உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் தொடர் வெற்றிகளை! மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்! உங்கள் உதட்டினில் தானே தவழ்கிறது தூய புன்னகை! உலகின் கோணப்பார்வைக்குத் தானே குறை பிறை! நிலவுக்கு ஏது? திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு! விழிகள் மூடுவதில்லை என்றும் […]
காமம்!!

சந்திர மண்டலம் சடுதியில் செல்பவரும் இந்திரிய இன்பத்திற்காகத் திரும்ப வந்திடுவர்! மந்திரம் மாயமென கபடம் பேசுபவரும் தந்திரம் செய்தாவது திரைமறை சுகித்திடுவர்! இயந்திர கதியில் இல்வாழ்வு நடத்துபவரும் இதந்தர வேண்டி இரவினில் கூடிடுவர்! மதந்தரு போதனைகள் மாண்புடன் கற்றவரோ பயன்தரு வகையினிலே பண்புடனே கடன்புரிவர்! இச்சையாய்ச் சேருவதே இறைவனின் படைப்பென்றால் கொச்சையாய் அதனையும் கூவிடுவது எதனால்? சர்ச்சையாய் ஒருவரின் இணக்கமும் இன்றியே பச்சையாய்ப் புணர்ந்திட முயல்வதொன்றே பாவம்! இருவரும் வளர்ந்து வயதிற்கு வந்தவரெனின் இருவரின் ஒப்புதலும் இனிதே […]
பட்டாசில்லா தீபாவளி!!

பஞ்சணையில் நாம்துயில பஞ்சத்திலே தனையிழந்து பரிதவிக்கும் நிலையினிலே பலகுடும்பம் இருக்குதிங்கே! பட்சணங்கள் இனிப்புகளென பலவிதமாய்க் கொண்டாடுகையில் பசிக்கொடுமை தாங்காது பட்டிதொட்டி துடிக்குதங்கே! பட்டங்கள் பெற்றிட்ட பட்டிணத்து நீதியரசர்கள் பட்டாசுக்கு விதியமைக்க பட்டதுயர் விளக்கிடுமுன் பச்சிளஞ் சிறார்களும் பள்ளிக்குச் சென்றிடாமல் பட்டாசுத் தொழில்புரிவது பலகாலம் நடப்பதென்று பக்குவமாய் உணர்ந்துநாமும் பழிபாவம் ஒன்றறியா பச்சிளம் பாலகரின் படிப்பினை நெஞ்சிலிட்டு பலர்பேசும் வம்பதனை பயனில்லையென ஒதுக்கிவைத்து பட்டாசில்லா தீபாவளியை பண்போடு கொண்டாடிடுவோம்! – வெ. மதுசூதனன்