\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதை

நீரைத் தழுவும் காற்றின் சுகம்

Filed in கவிதை, வார வெளியீடு by on February 11, 2018 0 Comments
நீரைத் தழுவும் காற்றின் சுகம்

நீரைத் தழுவும் காற்றின் சுகம் நெடுங்கோண இதழ்களால் சுட்டி நிற்கும் பிஞ்சுக் குழந்தையின் சிற்றொலி… இலவம் பாதம் நெகிழும் காற்றின் புல்வெளி … காலசைத்த புது உயிரின் விட்டம் பார்க்கும் சுட்டுவிழி…. எல்லாமாய் இயங்கும் புதிய சூரியனை கரங்களில் ஏந்துதல் உலகின் அப்பாக்களுக்கு நீரைத் தழுவும் காற்றின் சுகம். – முனைவர் சு.விமல்ராஜ்

Continue Reading »

பூனை

Filed in கவிதை, வார வெளியீடு by on December 31, 2017 0 Comments
பூனை

காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? –         கவிஞர் டாக்டர் எஸ். […]

Continue Reading »

ஆழ்மன ஆசைகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on December 24, 2017 0 Comments
ஆழ்மன ஆசைகள்

காலையில் எழுகையில் கருத்தெலாம் கடவுள் காரிருள் குவிகையில் கனவெலாம் காதல்! வைகறை மலர்கையில் வாய்முழுக்க மந்திரம் வானிலொளி மறைகையில் வாய்த்திடும் மன்மதம்! விடிந்து எழுகையில் விதைத்திடும் ஆக்கம் விலக்கிய போர்வையில் விளைந்திடும் ஏக்கம்! பகற்பொழுது பார்க்கையில் பெண்மையொரு யாகம் படுக்கையில் இருக்கையில் பாழ்மனமெங்கும் மோகம்! மேடையில் முழங்குகையில் மேதாவியாய் வாதம் மேலாடை விலகுகையில் மேன்மையிலாக் காமம்! ஆண்களின் உள்ளமது ஆசைகளின் இருப்பிடம் ஆழ்மன அழுக்குகள் ஆராய்வது அவசியம்!! –    வெ. மதுசூதனன்

Continue Reading »

நிலாவில் உலாவும் மான் விழியே

Filed in கவிதை, வார வெளியீடு by on December 10, 2017 0 Comments
நிலாவில் உலாவும் மான் விழியே

கலையழகு மிக்க கயல்விழியே குலையாத காதல் கொண்டேன் அழகியே நிலையாக வாராமல் ஓடி ஒளிவதேன் அலையாக வந்து மோதிச் செல்கிறாய்!   தேடவே கிடைக்கா தெள்ளமுதே நாடவே செய்திடும் உன் அழகு கோடான கோடி மக்களின் பேரழகி! பாடவே வைக்கிறாய் கவிஎழுதி! நிலாவில் உலாவும் மான் விழியே நிம்மதி தேடி அலைய வைக்காதே நினைவிலும் கனவிலும் உன் முகமே நிறைந்திடும் நீவந்தால் என் அகமே! கருகான பயிர்போல் நான் வாடுறேன் உருகாத மனம்போல் நீ நடிக்கிறாய் அர்த்தமற்ற […]

Continue Reading »

ஒற்றைப் பார்வையால் ….!!

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
ஒற்றைப் பார்வையால் ….!!

வைகறைப் பொழுதினில் ஜன்னலிடை நுழைந்து எனை இழுக்கும் காலைக் கதிரவனின் கண்கூடக் கூசும் ஒரு நிமிடம் உந்தன் ஒற்றைப் பார்வையால் …..! அதிகாலை உறைபனியில் புல்நுனியில் படர்ந்திருந்த பனித்துளியாய் எனை என்னுள் உறைய வைத்தாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! யாமத்தைக் கூட்டவே கனவினில் புன்னகையைத் தெளித்தே பூக்கோலமிட்டு பல வண்ணங்களை என்னுள் தீட்டினாயே உந்தன் ஒற்றைப் பார்வையால் …! மழையின் ஸ்பரிசத்தை நடுநிசியில் அறிந்திட மின்சாரத்தை என்னுள் பாய்ச்சியே தென்றலின் தீண்டலைத் தந்தாயே உந்தன் ஒற்றைப் […]

Continue Reading »

கந்துவட்டி

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 1 Comment
கந்துவட்டி

அசல் பெற்ற பிள்ளையா? அசலின் நகலா? வட்டி! தனிவட்டி கூட்டுவட்டி தெரியாதவனுக்கு கந்துவட்டிக் கணக்கு யார் சொல்லிக் கொடுத்தது? கந்துவட்டி எண்ணெயில் கொப்பளிக்கிறது ஏழைகளின் உடல்கள்! வட்டியில் பிழைப்பவர்களே! நீங்கள் சம்பாதிப்பது பணத்தையல்ல… பாவத்தை! பல ஏழைகளின் உடல்களை எரித்துத் தின்கிறது உங்கள் குடல்கள்! வட்டிமேலே வட்டி போட்டு கழுத்தை இறுக்கும் கந்துவட்டிக் கயிறு… பல தாலிகளைத் திரித்து உருவான கயிறு! மஞ்சள் கயிறு நிறம்மாறிப் போகுது! ஏழைகளின் அழுகையைக் குடித்துக் குடித்து தினம் வாழுது! ஏதுமில்லா […]

Continue Reading »

கேள்வி

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
கேள்வி

ஒரு கேள்வி.. பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள். தன் வாழ்வின் இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை.. மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில் இருந்து மரம் பார்க்கிறது. உறவல்ல.., பிரிவு உணர்த்தும் பிரம்மாண்டம்… சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக […]

Continue Reading »

கார்மேகங்கள்

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
கார்மேகங்கள்

பகலிலும் குளிருதோ கதிரவனுக்கு… போர்த்திக் கொண்டான் கார்மேகப் போர்வையை! நனையாமலிருக்க எவர் பிடித்த குடை கார்மேகங்கள்! பூமிக்கு முகங் காட்டிய மேகப் பெண்கள்… வானுக்கு முகங் காட்ட திரும்பிக் கொண்டதோ! அதன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்களோ மழைத்துளிகள்! கூந்தலின் வாசந் தானோ மண் வாசனை! கதிரவ மன்னனின் மனைவிமார்களோ இம்மேகங்கள்! அவன் நோய்வாய்ப்பட்டதால் கூடி அழுகிறார்களோ? இம்மேகப்பெண்கள்! ஆடையிழக்கும் பூமிப்பெண்ணிற்குப் பச்சை சேலை வழங்கும் கருமைநிற மாயக் கண்ணன் இக்கார்மேகங்கள்! வான் காரிகையின் மார்பகங்கள் மேகங்கள்! தாய்மையடைந்த […]

Continue Reading »

அடிப் பெண்ணே…!!

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
அடிப் பெண்ணே…!!

மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]

Continue Reading »

கவித்துளிகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on November 19, 2017 0 Comments
கவித்துளிகள்

நீ எனக்குத் தேவையில்லை…!! தனிமையின் சொற்களை விழுங்கி செரித்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… நடுங்கும் விரல் கொண்டும் தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன். நீ எனக்குத் தேவையில்லை… அட்சய பாத்திரம் அதை நான்கு வாங்கி வைத்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… சகாய விலை பேசி உடல் புகுந்து பழகிவிட்டேன் .. நீ எனக்குத் தேவையில்லை… எரியும் பகலொன்றில் உன் எச்சில் தேடும் நிமிடம் வரை நீ எனக்குத் தேவையே இல்லை .. எரியாத பகலென்று ஏதும் உண்டா […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad