\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கதை

கார்ப்பரேட் கனவுகள்

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2017 17 Comments
கார்ப்பரேட் கனவுகள்

“ரேணு. நேத்து ஒரு வரன் ப்ரோஃபைல் சொன்னேனே   அதைப் பார்த்தியா? பிடிச்சிருக்கா?” “ “ “என்னடி பதிலையே காணோம்?” “அம்மா. நீங்க முழுமையா பாருங்க எனக்கு எது ஒத்துவரும். வராது என்று நீங்க ஒரு ஐடியா வச்சிருப்பீங்க. இல்லையா? அதற்கெல்லாம் ஓகே என்றால் எனக்குச் சொல்லுங்க.. அப்புறம் நான் என் ஒபினியனைச் சொல்கிறேன்” “இப்படிப் பொத்தாம் பொதுவாப் பேசினா எப்படிடி? உனக்குப் பொருத்தமான வரன் என்று பார்த்து 100 சதவீதம் நாங்க திருப்தியானப்பறம் தான் உனக்குச் சொல்றோம். […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 5)

Filed in கதை, வார வெளியீடு by on December 24, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 5)

* பாகம் 4  * “என்னம்மா நீங்க… உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க போலிருக்கு…? அவசரப்பட்டுட்டீங்களே?” – டச்சப் பார்கவி ஆறுதலாய் முன் வந்தாள். “ஆமா…. அவன் அழகு நடிப்புங்கிறதைக் கூட மறக்கடிச்சிடுதுப்பா…. ஒரு சிரிப்புச் சிரிக்கிறான் பாரு…. கண்ணை மயக்கி, உதட்டைச் சுழிச்சி… அந்தச் சிரிப்பு வெறும் நடிப்பில்லைப்பா…. உண்மைலயே எம்மேலே அவனுக்கு ஆசை  இருக்குன்னு தோணிடிச்சு….. அவன் அணைக்கிறபோது நடிப்புங்கிறதையே மறந்திடுறேன் நான்…. எதுக்காக அவன் மேலே இப்டி ஆசை வந்திச்சின்னே தெரில….. ஆனாலும் நடிக்கிறபோது சில்மிஷம்ங்கிறது ஓவர்…. […]

Continue Reading »

சுதந்திரம் ஒரு முறை தான்

Filed in கதை, வார வெளியீடு by on December 17, 2017 0 Comments
சுதந்திரம் ஒரு முறை தான்

  “சார்ள்ஸ்டன் கரோலைனா” என்னும் ஊரில் “கெனத்” எனும் இளைஞன் புகையிலைகள் மத்தியில் கொட்டும் வெய்யிலில் களை எடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாதங்கள் மண்ணில் வெறுமையாகப் பரவியிருந்தன. கருங்கல் போன்ற தோல் உருவம், அடர்த்தியற்ற கருமைத் தலைமுடிகள்… அவன் வியர்வைத் துளிகள் வெய்யிலில் உலர்கின்றன. துணிமணி இல்லாத… ஆங்காங்கே கை, கால், முதுகு, தொடை என பல இடங்களில் காயத் தழும்புகள் கொண்ட பரிதாப இளம்  உடல். ஆமாம் பாவம் ‘கெனத்’, அவன் ஒரு வெள்ளை எசமானது […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 4)

Filed in கதை, வார வெளியீடு by on December 17, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 4)

உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் பிரேம்குமார்.  திரும்பத் திரும்ப அவன் கை, அடிபட்ட அந்தக் கன்னத்தை நோக்கியே சென்று, தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது. தடம் தெரிகிறதா என்று எழுந்து சென்று கண்ணாடியின் முன் அமர்ந்து கூர்மையாகப் பார்த்தான். பளிச்சென்று தெரிந்தது.. நான்கு விரல்கள் அப்படியே பதிந்திருந்தன. மேக்கப் கலைத்த பின்பு தெரியாது என்றுதான் நினைத்தான். அந்த அளவுக்கு ஆழமான, அழுத்தமான அடி. மனதுக்குள் ரணம் புகுந்திருந்தது வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாகி, வெறியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. படுக்கையின் மேல் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 3)

Filed in கதை, வார வெளியீடு by on December 10, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 3)

( * பாகம் 2 * ) அப்பா தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார் என்று உறுதியாய் அறிவாள் கல்பனா. அம்மா பவானிதான் அரித்தெடுக்கிறாள். பஞ்சாபகேசன் அசைவதாயில்லை. “உனக்கு ஒண்ணும் தெரியாதுடி….நாம என்ன ஆம்பிளைப் பிள்ளையா பெத்து வச்சிருக்கோம்…ஒரு பொண்ணுதானே இருக்கு…. உனக்கும் எனக்கும் பென்ஷனா வருது? ஏதோ வியாபாரத்தைப் பார்த்தேன்…. காலத்தை ஓட்டினேன். கஷ்டப்பட்டு ஒரு பொண்ணைப் படிக்க வச்சிட்டேன்… என் தங்கச்சி லலிதா இருந்தா… அவ வேலைக்குப் போனதால கூடக் கொஞ்சம் […]

Continue Reading »

கோடை மழை

Filed in கதை, வார வெளியீடு by on December 10, 2017 0 Comments
கோடை மழை

மூணு மணிக்கெல்லாம் இருட்டிட்டு வந்தது. இன்னும் செத்த நேரத்துக்கெல்லாம் மழை புடி புடினு புடிக்கப்போவுது. கல்லு வீட்டு மாடியில் காயவைத்திருந்த சோத்து வத்தலை அதைப் பிழிந்து வைத்திருந்த புடவையோடு சுருட்டிக் கொண்டு ஓடி வந்து வீட்டில் ஒரு அறையின் மூலையில் வைத்துவிட்டு திரும்புகையில் மின்சாரம் போனது. “புடுங்கிட்டான் கரண்டை.. இனி எப்ப வருமோ..?” -அம்மா “இடியும் மின்னலுமா இருக்குன்னு நிறுத்தி இருப்பான்.. மழை விட்டொடனே குடுத்திடுவான்”.- அப்பா. “தோட்டத்துல கிடக்குற அந்த காஞ்ச செராவை (சிறியதாக பிளக்கபட்ட […]

Continue Reading »

எதிர்பாராதது – பாகம் 2

Filed in கதை, வார வெளியீடு by on December 3, 2017 0 Comments
எதிர்பாராதது – பாகம் 2

  * பாகம் 1 * தொலைபேசி மணி அடித்தது. ரிங் டோனை வைத்து அது கங்காவின் செல் என்று அறிந்து பேசாமல் இருந்தார் தாமோதரன். அவளுக்கு ஃபோன் வந்தால் அவர் போய் எடுக்க மாட்டார். அவளே வந்து எடுக்கட்டும் என்று இருந்து விடுவார். அதுபோல் அவருக்கு ஃபோன் வந்தால் அவளும் போய் எடுப்பதில்லை. அடித்து ஓயட்டும், நமக்கென்ன என்று விட்டுவிடுவாள். இப்போது மணி அடித்துக் கொண்டேயிருந்தது. நிற்கிறவரை அடிக்கட்டும்…எனக்கென்ன? என்று உட்கார்ந்திருந்தார். அவள் எங்கே என்ற […]

Continue Reading »

வாய்ப்புகள் திரும்புவதில்லை

Filed in கதை, வார வெளியீடு by on December 3, 2017 0 Comments
வாய்ப்புகள் திரும்புவதில்லை

நூறாவது தடவையாக திலகவதி கதிர் கூறிய வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டாள். சுற்றி வளைத்துப் பேசினாலும் கடைசியில் அவன் பேசிய மொத்தப் பேச்சின் அடக்கமும் அந்த ஒரு வாக்கியத்தில்தான் முடிவு பெற்றது. ‘நல்ல நண்பர்களாக இருக்கும் நாம் ஏன் கணவன்-மனைவியாகக் கூடாது?’ என்ன துணிச்சல்? என்ன ஒரு துரோகம்? திலகவதி ஒரு அறிவுஜீவி. தான் படிக்கும் இரசாயனப் பாடம்தான் அவளது முதல் காதல். அதில் முனைவர் பட்டம் பெற்று மேல் படிப்புக்கு வெளிநாட்டுப் பல்கலையில் நுழைய வேண்டும் என்பதுதான் […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 1)

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 1)

“ஒரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக் குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும் அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும், மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….” சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் […]

Continue Reading »

போர்வை

Filed in கதை, வார வெளியீடு by on November 19, 2017 0 Comments
போர்வை

மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad