\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கதை

குடிமகனின் மகன்

Filed in கதை, வார வெளியீடு by on November 12, 2017 1 Comment
குடிமகனின் மகன்

1966 ஆண்டில் நான் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றபின், சிறீ லங்கா தொலை தொடர்பு திணைக் களத்தில் சிரேஷ்ட பொறியியலாராக உத்தியோகம் கிடைத்து வேலை செய்த காலகட்டத்தில், எனக்கு அறிமுகமான பல இன நண்பர்கள் அதிகம். அதற்குக் காரணம் நான் தமிழ் ஆங்கிலம், சிங்கள மொழிகளைச் சரளமாகப் பேசுவேன். அதோடு எல்லோருடனும் அன்பாகப் பழகும் குணம் உள்ளவன்.  அப்போது  திருமணமாகாத நான் தங்கியிருந்தது கொழும்புக்கு அருகேயுள்ள வெள்ளவத்தையில், சம்மரி என்று அழைக்கப்படும மூன்று அறைகளைக் கொண்ட வாடகைவீட்டில். […]

Continue Reading »

இரவல் சொர்க்கம்

Filed in கதை, வார வெளியீடு by on November 5, 2017 0 Comments
இரவல் சொர்க்கம்

‘ஓர் உயிரைக் காப்பாற்ற இன்னோர் உயிரைப் பறித்தது முறைதானா?’  ‘பிள்ளையைக் காக்க கணவருக்கு முடிவளித்தது சரியா?’  ‘வாழ்வில் இனி எனக்கு நிம்மதி கிட்டுமா?’  கத்தியின்றி இரத்தமின்றி கேள்விகளாலேயே ரணமாக்கும் வல்லமைகொண்ட வக்கீலான மனசாட்சியிடமிருந்து தப்ப முடியாது தவித்துக்கொண்டிருந்தாள் ஆதிரை.    கேள்விகள்…. கேள்விகள்…. விடாது துரத்தும் கேள்விகள்…  எங்கே ஓடுவாள் ஆதிரை? ஓடத்தான் முடியுமா? கடந்த ஆறுமாதத்திற்கு மேலாக ஓடி ஓடியே உருத்தெரியாது போய்விட்டாளே! இனியும் ஓடுவதில் அர்த்தமில்லை எனும் நிலையில் சுருண்டு விழுந்தவளுக்கு, அந்த ஆயாசம்கூட […]

Continue Reading »

அடச்சே என்ன வாழ்க்கை இது

Filed in கதை, வார வெளியீடு by on October 30, 2017 1 Comment
அடச்சே என்ன  வாழ்க்கை இது

காலை மணி ஐந்து.  பக்கத்தில் இருந்த அலாரம் அடித்தது. முதல் நாள் இரவு offshore call லேட்டா தான் படுத்திருந்தாள். உடல் எழுந்திருக்க மறுத்தது. திரும்பி படுக்கத் தோன்றிய மனதை அடக்கி எழுந்தாள் அகல்யா. காலை கடன்களை முடித்து விட்டு சமையல் அறைக்கு உயிர் கொடுத்தாள். குழந்தைகளின் மதிய உணவை வேகமாக தயார் செய்தாள். கடிகாரம் மீது ஒரு கண்ணை வைத்தபடி, மூத்தவன் அதர்வா பையிலும், சின்னவள் ஆதிரை பையிலும் மதிய டப்பாக்களை அடைத்தாள். மணி 6.15. […]

Continue Reading »

அனுபவம் புதுமை

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments
அனுபவம் புதுமை

ஜூன் மாதத்தில் ஒரு நாள், என் மகள் அம்மு கேட்டாள், “அப்பா, என் பிறந்த நாளுக்கு எனக்குப் பரிசுபொருள் எதுவும் வேண்டாம். எனக்குப் பிடித்த இசைக்குழுக் கச்சேரிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்”. நானும் இது அக்டோபரில் தானே என்று நினைத்துச் சரி என்று சொல்லிவிட்டேன். அன்று ஆரம்பித்தது என் அனுபவப் பயணம். தினமும் “டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டவண்ணம் தான்  பேச்சைத் துவங்குவாள். அவள் சொன்ன படியே ஆளுக்கு நூறு டாலர் செலவழித்து “இமேஜின் டிராகன்ஸ்” ( […]

Continue Reading »

அசௌகரிய வீடு

Filed in கதை, வார வெளியீடு by on October 22, 2017 0 Comments
அசௌகரிய வீடு

இலையுதிர் காலத்தில் ஏரிக்கரை மரங்களின் நிறம் மாறுகின்றது. இலைகள் மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பாக மாறுகின்றன. சில்லென்ற குளிரில் சில புற்களும் உலருகின்றன. ஏரிக்கு அருகே பல குட்டைகளும், வாய்க்கால்களும் உள்ளன. இவற்றில் மிதக்கும் அல்லிப்பூக்களும், அயல் நீர்த் தாவரங்களும் பூத்து ஓய்கின்றன. அல்லிக் கொடிகள் குட்டை மேல் நீர் கடந்து தெரிகின்றன. வட்ட இலைகள் வாடுகின்றன. இது இலையுதிர் கால இறுதியில் குட்டைகளின் தன்மை. நீரில் வளரும் தாவரங்கள் கோடை வெய்யிலில் பெருகும். பின்னர் அடுத்த வருடத்திற்கு உதவும் உக்கல் மண்ணாக […]

Continue Reading »

குற்ற உணர்ச்சி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments
குற்ற உணர்ச்சி

“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வர வேண்டாம்” அப்பா அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட கண்ணனுக்கு கோபம் ஒரு பக்கம், சிரிப்பு ஒரு பக்கம் வந்தது. இந்தச் சாமிநாதனை இதோடு எத்தனை தரம்தான் இப்படி மிரட்டிக் கொண்டே இருப்பார். அவரும் பதிலுக்கு, ”சரிங்க முதலாளி, இனிமே நேரத்துல வந்துடறேன்” .இதே வார்த்தைகள்தான் இவரிடம் வரும். இவனும் பல முறை அப்பாவிடம் சொல்லி விட்டான், ”அப்பா அவருக்கு ஓய்வு கொடுத்துடலாம், […]

Continue Reading »

சுகமான தீபாவளி

Filed in கதை, வார வெளியீடு by on October 15, 2017 0 Comments
சுகமான தீபாவளி

”ஏன்னா… நான் சொன்னேனே.. ஜிலேபி ரெட் வாங்கிண்டு வந்தேளா?” மங்களம் மாமியின் கேள்வி தொடங்கியது. “நீ சொன்ன எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேண்டி.. அது ஒண்ணு தவிர… கடைக்காரா யாருக்கும் ரெட்டுனா என்னன்னே தெரியலடி… அது தமிழ் வார்த்தைதானா?” ஒரு சாதாரணத் துணிக்கு பதினைந்து ரூபாய் தர வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டு வந்து, அதைச் சமாளிப்பதற்காக இழுத்தார் சுந்தரம் மாமா. “ஆமா.. உங்களுக்கு ஒண்ணு வாங்கிண்டு வர சாமர்த்தியமில்லன்னா, நேக்குத் தெரியாதுன்னு சொல்லிடுங்கோ… ஜிலேபி ரெட்டு தெரியாதவா […]

Continue Reading »

கொலு பொம்மை

Filed in கதை, வார வெளியீடு by on September 10, 2017 0 Comments
கொலு பொம்மை

”நீ ஆத்தப் பாத்துக்கோடா… நான் ஒரு இரண்டாத்துக்குப் போய், குங்குமம் வாங்கிண்டு வந்துடறேன்”…. அம்மா சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானாள். “அம்மா, என்னம்மா.. என்னப்போய்… இது பொம்மனாட்டிகள் சமாச்சாரம்..யாராவது வந்தான்னாக்கா நான் என்ன பண்ணுவேன்??” என்று இழுத்த கணேஷைப் பார்த்து, “நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேண்டா.. அதுக்குள்ள யாரும் வரமாட்டா.. அப்டியே வந்தாலும் உக்கார வை, நான் வந்துடறேண்டா” சொல்லிக்கொண்டே அவன் பதிலுக்கும் காத்திராமல் வெளியேறினாள் மங்களம் மாமி. ”அம்மா, அம்மா” என்று தான் கத்திக் கொண்டிருப்பதைக் […]

Continue Reading »

மஹாகணபதிம் ஆவாஹயாமி……

Filed in இலக்கியம், கதை by on August 28, 2017 0 Comments
மஹாகணபதிம் ஆவாஹயாமி……

”ஏன்னா….. நாளைக்குச் சத்த ஆஃபீஸுக்கு லீவு போட்றேளா?…. “ கேட்ட லக்‌ஷ்மியைச் சற்றுக் எரிச்சலுடன் பார்த்தான் கணேஷ். “ஏன், என்னத்துக்காக லீவு போடணும்?” என்று கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு சாதாரண தொனியில் கேட்க, “நாளைக்கு கணேஷச் சதுர்த்தின்னா…. ஆத்துல பூஜை பண்ணணும், இது ஆம்பளேள் பண்ற பூஜை”…. என்று இழுக்க, “நோக்குத் தெரியாதாடி, நேக்கு இந்த பூஜை புனஸ்காரத்துலெல்லாம் பெருசா இண்ட்ரஸ்ட் இல்லடி.. என்ன விட்டுடேன்….” என்று கெஞ்சத் தொடங்கினான். “நான் உங்கள எப்பப்பாத்தாலுமா தொந்திரவு […]

Continue Reading »

மன்னிப்பாயா ..

Filed in இலக்கியம், கதை by on August 28, 2017 0 Comments
மன்னிப்பாயா ..

நிரஞ்சனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூங்க முடியவில்லை. படுக்கையை ஒட்டிய மேஜை மீதிருந்த செல்ஃபோனை எடுத்தான். பளீரென ஒளிர்ந்து கண்ணைக் கூசியது. கண்களை இடுக்கிப் பார்த்ததில் மணி 3.17 am என்று காட்டியது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தான். கால்களில் துணி விலகியதைக் கூட உணராமல், குழந்தை போல் குப்புறப் படுத்து, நித்சலனமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஷர்மி. தூக்கத்திலும் முகத்தில் மெலிய புன்னகை. விலகிக் கிடந்த நைட்டியை இழுத்துவிட்டு, பக்கத்திலிருந்த போர்வையைக் கழுத்து வரையில் போர்த்தி […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad