கதை
கதவடைப்பும் கழுமரங்களும்

1996. “வீணாப்போனவங்க. இப்பிடி பண்ணிட்டாங்களே…”அங்கலாய்த்தபடி தொழிற்சங்க அலுவலகத்துக்குள் பிரவேசித்த விஜயன் காலியா யிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமியின் முகத்திலும் கலவரச்சாயல் படிந்திருந்தது.கவலையால் ஏற்கனவே கருத்திருந்த முகம் மேலும் கறுப்பாகியிருந்தது. “எல்லாம் மொதலாளிங்க பாத்து செய்ய வேண்டியது.இப்ப பாரு எல்லாத்துக்கும் பிரச்சினை” என்றார். “ஆமாங்கண்ணே.வேலூர் சிட்டிசன் வெல்பேர் அசோசியேஷன் தான் கேஸ்ஸ ஃபைல் பண்ணியிருக்காங்க.அவங்க பார்வைல இது சரி தான்.ஆனா நம்ம வயித்து பொழப்பப்பத்தி நெனச்சி பாத்தாங்களா இல்லையான்னு தான் தெரியில”. ”எல்லாஞ் […]
கண் முன் கடவுள்

காக்கிச் சட்டையில் மடிப்புக் கலைந்ததைப் பொருட்படுத்தாது உதறி விட்டு நடந்தார் கன்னியப்பர். அவர்கள் வீட்டு, சின்ன முகப்பில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தார். முன் நெற்றி வழுக்கையை மறைக்கும் விதமாக இருந்த சிறிய முடியை வலப்பக்கம் திருப்பி வாரினார். முகத்தின் சுருக்கங்கள் கண்ணாடியில் தெரிந்தன. ஆயிற்று வயது…. இந்தத் தை பிறந்தா 58 வயசு ஆயிடும். மிடுக்கு, வீம்பு எல்லாம் தளரும் வயது தொடங்கித் தான் விட்டது. சிவகாமி போன போதே பாதி ஆயுள் போயாச்சு. கண்ணாடிக்குப் […]
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]
க்ளோத்திங் ஆப்ஷனல்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம் அடித்துக் கொண்டிருந்தது…. எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த […]
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]
மாற்றம்

டாம் என்கிற தமிழரசன் முகத்தில் ஒரு பரபரப்புத் தெரிந்தது. மினியாபோலிஸ் இருந்து லாஸ் வேகாஸ் புறப்படத் தயார் ஆகி கொண்டிருந்தான். அதுவும் இல்லாமல் அவனுடைய நெருங்கிய நண்பனுடைய வருகைக்காகவும் காத்துக் கொண்டிருந்தான். நண்பன் ரஞ்சித் தொலைபேசியில் எவ்வளவு கேட்டும் டாம் பதில் சொல்ல மறுத்தான். “நேரில் வா பேசிக்கொள்ளலாம். இரண்டு நாளைக்கு வேண்டிய துணிமணி எடுத்துக்கொண்டு வா” என்றான். ரஞ்சித் தனது மனைவியை இழந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடிரென “வா […]
செம்புலப் பெயல் நீர்…….

“கமான்.. காந்தி கேரளாலதான் பொறந்தாரு”… மூன்றாவது முறையாக அடித்துச் சொல்லும் அருணாவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கணேஷ் என்ன சொல்வதென்று புரியாமல் திகைப்புடன் நிற்கிறான். “இல்லம்மா, நான் தான் சொன்னேனே… வந்து…” வாக்கியத்தை முடிக்கு முன்னர் கணேஷை இடை மறித்த அருணா, “நான் மம்மிக்கிட்ட கேட்டுக் கன்ஃபர்ம் பண்ணிக்கிறேன்” என்று முறைப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள். “ம்ம்…. இந்தப் பொண்ணையா நாம?….” என்று நினைக்கத் தொடங்கி, ”நோ நோ.. அப்டி நெனைக்கக் கூடாது” தன்னைத் தானே […]
லெக்ஸி

வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்டது. லிவிங் ரூமில் தனது விரிப்பில் படுத்திருந்த லெக்ஸி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு ஓடியது. மடிக்கணினியில் எதையோ பார்த்தவாறு, ஃபோனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த பவி “வாசல்ல யாரோ வந்திருக்காங்க போலருக்கு..நான் அப்புறமா கூப்பிடட்டுமா .. ம்ம்? சரி.. நீயே கூப்பிடு” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்துவிட்டு எழுந்தாள். அதற்குள் கதவோரக் கண்ணாடி வழியே ஒரு சிறுமி நின்று கொண்டிருப்பதைப் பார்த்த லெக்ஸி, பவியிடம் ஓடி வந்து வேகமாக வாலை ஆட்டியவாறு, கதவைச் சீக்கிரம் […]
எங்கிருந்தோ வந்த நட்பு

எல்லா இடங்களிலிருந்தும் விரட்டப்பட்டு, எங்காவது சாப்பிடக் கிடைக்குமா என ஏக்கத்திலிருந்த அந்த தெரு நாய், அது படுத்திருந்த இடத்தில் மற்றொரு குட்டி நாய் படுத்திருப்பதைப் பார்த்து உர்… என உறுமி இது என் இடம் என்று எதிர்ப்பைக் காண்பித்தது. இதனைக் கண்டவுடன் அந்த இடத்தில் இருந்த நாய் வாலைப் பின் கால்களில் நுழைத்து வளைந்து குழைந்து மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. போகும்போது கூட ஓரக்கண்ணால் இது எங்காவது தன் மீது பாய்ந்து விடுமோ எனப் […]
எது பெண்மை ?

ஒரு மாதிரி சமையல் வேலையை முடித்தாள் தேவி. சமையல் அறையின் மேஜையை அழுத்தி மறுமுறை அழுத்தி துடைத்து விட்டு கையை உதறி அதை குப்பையில் எறிந்தாள். “ஹ்ம்ம்” என்ற ஒரு பெருமூச்சு அவளை அறியாமல் வந்தது. இன்னும் அரை மணி நேரம் இருக்கு கிளம்ப, அப்புறம் மீது குட்டியை கூப்பிட்டுக்கிட்டு வரணும். சுவற்றில் இருந்த அந்த குட்டி மீதுவின் புகைப்படத்தைப் பார்த்தபொழுது ஒரு உற்சாகம் பொங்கியது. அந்த குட்டி வாண்டின் சேட்டைகளும்,விளையாட்டும் எப்பொழுதும் மகிழ்வு தான். இன்று […]