கதை
அப்பா…

மவுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் […]
உச்சி தனை முகர்ந்தால்

வழக்கம் போல் அந்த அதிகாலை நேரம் விடிந்தது. ஒவ்வொரு நாளும் இதே தான் என்ற ஒரு அலுப்புடன் எழுந்தான் தேனப்பன். வாசலில் செல்வி கோலம் போட்டு கொண்டு இருந்தாள். உள்ளே கோபி ஒருக்களித்து திரும்பி படுத்தான். பழக்கமான உடல் வழக்கமான வேலைகள் செய்தது. ஆனால் மனம் அன்று ஒரு நிலையில் இல்லை. தேதியைக் கிழிக்கும் பொழுது இன்று காலையில் சீனுவை ரயில் நிலையம் சென்று கூட்டி வர வேண்டும். மூன்று நாட்கள் கும்பகோணம், சிதம்பரம், பட்டீஸ்வரம் செல்ல […]
எது தவறு?

“ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு” என்றார் போஸ்ட்மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர். “சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன்,” “தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார்” “சரி அந்தக் கடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு,” சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதைப் பார்த்து […]
அம்மா ஒரு தீர்க்கதரிசி

ஒரு வியாழக்கிழமை அதிகாலை… அமெரிக்காவில், கணேஷின் வீடு என்றும் போல் அன்றும் வேலை நாளுக்கான காலை நேரப் பரபரப்பில் தொடங்கியிருந்தது. அவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், முதல் மீட்டிங்க் காலை 7 மணிக்கு. லக்ஷ்மிக்கும் அலுவலகம் செல்ல வேண்டும், சற்று லேட்டாக அலுவலகம் தொடங்குகிறதென்றாலும் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்குத் தயார் செய்து, பெரியவளைப் பள்ளிப் பேருந்திலும், சிறியவளைப் பள்ளியிலும் சென்று சேர்த்து விட்டுத்தான் அவள் அலுவலகத்திற்குச் செல்ல இயலும். எல்லோருமே பரபரப்பாய் இயங்கும் நேரம். இந்த நேரங்களில்தான் […]
இன்னும் எத்தனை அமுதாக்கள்!!!

தினமும் பயணிக்கும் அதே சாலையாக இருந்தாலும் என்னுடைய ஒவ்வொரு நாளும் இந்தச் சாலையின் வழியாகப் பார்க்கப்படும் போது புதிதாக தான் காட்சியளிக்கிறது. எட்டு வருடங்களாக இதே சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகம் தான் என் பணியிடம். ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று அல்லது நான்கு விவாகரத்து வழக்குகள். இவழக்குகளில் குடும்ப நல ஆலோசகராகப் பணியாற்றுவதில் இருக்கும் உண்மையான சிரமம் அவ்வழக்குக்காக வரும் பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்கும் போதும், அவர்களின் நியாயமான எந்த முடிவிற்கும் துணை […]
எதிர்பாராத முடிவு !

விநாயகர் படத்தின் அருகில், மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தேன். திறந்தவள் திகைத்தேன். முன் பின் தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே நின்று கொண்டிருந்தாள். ‘என்ன ?’ என்பது போல் அவளைப் பார்த்தேன். அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “ என்று சம்மந்தமில்லாமல் என்னைப் பார்த்துக் கேட்டாள். நான் அவளைப் பார்த்து “ […]
சின்ன சபலம்

மினியாபோலிஸ் நகர மையப் பகுதியில் இருந்தது அந்த லவ்ரி சந்து. மிகவும் குறுகலான ஒருவழிப் பாதை. தெருவின் ரெண்டு பக்கத்திலும் புராதனமான, பராமரிக்கப்படாத கட்டிடங்கள். காரை பெயர்ந்து சிதிலமடைந்து சிதைந்து போயிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்ததும் இந்தியாவின் ஹவுசிங் போர்ட் வீடுகள் நினைவுக்கு வந்தன விஸ்வாவுக்கு. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத் தான் தனது ஆடி காரை வீட்டில் வைத்துவிட்டு சாந்தியின் கரோலோவை எடுத்து வந்திருந்தான். ஜி.பி.எஸ். ‘யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றாலும் அது […]
அம்மா அப்பா’ விளையாட்டல்ல

‘அம்மா அப்பா’ விளையாட்டல்ல! எதிர் வீட்டுப் பெண் நின்றிருந்தார். “எங்க வீட்ல வேலை செய்றவங்க நின்னுட்டாங்க. உங்க வீட்ல செய்றவங்க வருவாங்களான்னு கேக்க வந்தேன்.” இன்று கிளாரா அக்கா விடுமுறை. சிங்க்கில் கிடந்த பாத்திரங்களை நானே தேய்ப்பதற்கு நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சொன்னேன். “நம்பர் இருக்கா…ஃபோன் பண்றீங்களா? எனக்கு இப்போவே யாராவது வந்தா தேவலை. ரென்டு நாளாச்சு எங்க வீட்ல வேலை செய்றவங்க வந்து. ரொம்பக் கஷ்டமா டயர்டா இருக்கு.” அழுது விடுவாள் போலிருந்தது. நான்கு […]
நிஜம் நிழலாகும்

“பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் . அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள். “கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா? “ பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. “கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR […]
நிறமற்ற சினிமா

படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]