கதை
“குத்துக்கல்…!”

அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]
சமத்துவம்

அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]
ஒரு துளி கண்ணீர்

“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]
அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே……….

சமீபத்தில் சென்னையில் அண்ணா சாலையில் பிரயாணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னையிலேயே மிகவும் உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பல வருடங்களாகத் தக்கவைத்துக் கொண்டிருந்த எல்.ஐ.சி கட்டிடம் இருந்த திசையிலிருந்து தியாகராய நகர் நோக்கிப் பயணம். சென்னையின் கம்பீரமாகப் பல திரைப்படங்களில் காட்டப்படும் அண்ணா மேம்பாலத்தில் ஏறுகையில் தற்செயலாகக் கண்கள் காரின் கண்ணாடி ஜன்னல்களுக்கூடாக வெளியே பார்த்தன. அமெரிக்கன் கான்சுலேட்… அதன் காம்பவுண்ட் சுவர். அதை ஒட்டிய பிளாட்ஃபார்ம்…. கொளுத்தும் வெயில்.. நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளைஞிகள்… தங்களின் வாழ்வே […]
ஒரு IT ஆண் மகனின் சோகக் கதை

காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ். சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை. “எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது” “ஹ்ம்ம்” காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன. நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது. இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும். யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க […]
இறைவனிடம் கையேந்துங்கள்

“இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.. உங்களுக்குச் சேர வேண்டிய எதையும் தடுத்திட முடியாது.. வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள்..” பீயிங் .. பீயிங் என்று சிணுங்கியது லேப்டாப் அலாரம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் அமித். 113 ‘வேக் அப் கால்’ என்று காட்டியது கணினி. மணி ஏழாகி விட்டிருந்தது. அறை எண்ணில் தங்கியிருக்கும் லிண்டாவுக்கு ஃபோன் செய்து எழுப்பி விட்டான். ‘வேனோஸ் தியஸ் அமிகோ’ என்று சொல்லியபடி உள்ளே […]
சுய மரியாதை

மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான். வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி […]
கொலைபேசி

உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]
தனித் தீவு

அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]