\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கதை

வயற்காற்று (பாகம் – 02)

Filed in இலக்கியம், கதை by on May 7, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 02)

வயற்காற்று (பாகம் – 01) காற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள். “பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…” “விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…” “ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே” “இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…” […]

Continue Reading »

நெஞ்சு பொறுக்குதில்லையே

Filed in இலக்கியம், கதை by on May 6, 2014 0 Comments
நெஞ்சு பொறுக்குதில்லையே

“நான் கொஞ்சம் கீழே வரைக்கும் போய்ட்டு நடந்துட்டு வரேன்” என்று கிளம்பினார் அம்புஜம். “தினம் இப்படி போய் நடக்க வேண்டியது அப்புறம் ராத்திரி முழுக்க மூட்டு வலின்னு முனக வேண்டியது. இதே வேலை உனக்கு” என்று சொல்லியபடி உள்ளே இருந்து வந்தார் சதாசிவம். “மூட்டு வலி ஒண்ணும் நடக்கறதால இல்ல. வயசாச்சு. இந்த மாசி வந்தா 63 வயசு ஆச்சு. மூட்டு வலி வராம என்ன?.. “ஆமாம் பாட்டி ஆகி ஆறு வருஷம் ஆச்சு. “கீழே போனா […]

Continue Reading »

காத்திருப்பேன் நண்பரே!

Filed in இலக்கியம், கதை by on May 6, 2014 0 Comments
காத்திருப்பேன் நண்பரே!

காத்திருக்கிறேன் நண்பரே! மணி ஆறரை ஆகி விட்டது. என்றுமே தவறாமல் ஆறு மணிக்கெல்லாம் என்னுடன் பேச வரும் என்னுடைய ஆத்ம நண்பர் இன்று இன்னமும் வரவில்லை. முப்பது வருட நட்பு. தினமும் ஆறு முதல் எட்டு வரை என்னிடம் பேசுவார். அவர் தான் பேசுவார். நான் பொறுமையாகக் கேட்பேன். அவர் வீட்டைத் தாண்டி எவர் சென்றாலும் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவர்களுடன் பேசுவார். எல்லா விஷயங்களும் அவருடையப் பேச்சில் இருக்கும். அதனால் அவரின் நண்பர்கள் சரித்திரமும் எனக்குப் […]

Continue Reading »

அந்நியன்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
அந்நியன்

க்ளோவர் ஃபீல்ட் நிலையத்திலிருந்து பேருந்து மெதுவாகக் கிளம்பி நகர்ந்தது. இந்துவின் கண்கள் பிரேம் எங்காவது தென்படுகிறானா என்று தேடி அலைந்தது. யாரோ ஓடி வருவதைப் பின் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு ஓட்டுனர் வண்டியை நிறுத்தியபோது,. அவனாக இருக்குமோ என்ற ஆதங்கத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். வேறு யாரோ ஒரு பெண் அவசரமாக ஓடி வந்து “தேங்க்ஸ் ..ஜோ …” என்று சொல்லியவாறு ஏறிக் கொள்ள பேருந்து நகர்ந்து, பிரதான சாலையில் திரும்பி வேகமெடுத்தது. காலை ஏழரை […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4

பகுதி 3  முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]

Continue Reading »

பிள்ளைக் கனி அமுதே

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 1 Comment
பிள்ளைக் கனி அமுதே

பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?” “சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?” “ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.” “சின்னப் […]

Continue Reading »

வயற்காற்று (பாகம் – 01)

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]

Continue Reading »

இதுவும் ஒரு அஸ்வமேதம்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 2 Comments
இதுவும் ஒரு அஸ்வமேதம்

சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார். வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது   செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

பகுதி 2 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் […]

Continue Reading »

தவிக்கும் தமிழன்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 3 Comments
தவிக்கும் தமிழன்

சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad