கவிதை
என் புன்னகைக்குப் பின்னால்

என் புன்னகைக்குப் பின்னால் பார்க்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் சில வடுக்கள்…… காயங்கள் காய்ந்த பின்பும் முத்திரைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் கேட்கவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் சில பதில்கள்…. கேள்விகள் மட்டும் விஷக் கணைகளாய் ! என் புன்னகைக்குப் பின்னால் ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சில வார்த்தைகள் …… குத்திக்கிழிக்கும் தொடர் அம்புகளாய்! என் புன்னகைக்குப் பின்னால் இறக்கவும் முடியாமல் சுமக்கவும் முடியாமல் சில சுமைகள்…. அழுத்தம் கூட்டும் […]
கடவுளைக் காண்பீர்!

பொன் கொண்டோர், பொருள் கொண்டோர், மண், மாளிகை கொண்டோர், பூமியை ஆண்டோரையும் கண்டீர்! பூவையர் மனம் வென்றோரைக் கண்டீரோ? மங்கையரின்றி ஒரு மார்க்கம் உண்டோ – இந்த மானிட உலகில்? அன்பைப் பொழியும் தாயாக, காதலால் கசிந்துருகும் தாரமாக, சோதனையில் தோள்தாங்கும் உற்ற சகோதரியாக, தாயோ தந்தையோ மூப்படைந்ததும் மடிதாங்கும் சேயாக … பெண்ணைக் கண்டோர் உண்டிங்கு! ஆனால், சமூகப் பாகுபாடின்றி, கருணையே வடிவாக மானிட உயிரைக் காத்திட அச்சமின்றி, அருவெறுப்பின்றி அன்போடு அரவணைக்கும் […]
அன்னையர்க்கு அர்ப்பணம்

கையினிலே கல்லொன்று கனத்திட்டால் களைந்திடுவோம் தோள்களிலே தொங்கியதை தேவையென்றால் தவிர்த்திடுவோம் முதுகில்சிறு மூட்டையென்றால் முழுவதுமாய் மறுத்திடுவோம் அவ்வளவேன், அரைக்கிலோ அரிசிதூக்க அழுதே அலறிடுவோம்!! மாதமும் மாறிவர மாதவளுள் மகவுதோன்ற வருகின்ற வாரங்களில் வயிறதுவும் வளர்ந்துவர இயல்பது இல்லாததாகி இடுப்புவலி இயல்பென்றாக பின்னெலும்பு பிளக்கும்வகை பிள்ளையதைப் பிரசவித்தவள்!!! உள்ளிருந்து உருவாகி உணர்வுகளை உரித்தாக்கி உதரத்தில் உறைந்திருந்து உதிரத்தை உறிஞ்சியுண்டு உயர்வான உண்மைக்கு உவகையான உறவுமாக உயிரும் உடலுமாய் உன்னதமாய் உதித்ததது!! சிசுவது சிரிப்பதற்கும் சிரந்தூக்கிச் […]
இப்போது வேண்டுவதெல்லாம்

பனி விலகி வசந்த காலம் வந்தது தொட்டுவிடும் தூரத்தில் கோடை எட்டிப் பார்க்கிறது! காட்டாற்றின் கரையதனில் கதையளந்த காலம் போய் கையறு நிலையில்மனிதர்கள் நாம் சுவரில் ஒட்டிய பல்லிகளாய் – இன்னும் மடித்துப் போடப்பட்ட காகிதத் தாள்களாய் கசங்கிக் கிடக்கின்றோம் தனி அறைகளில் பல்லாயிரம் உயிர் தின்றும் அடங்காது ஆர்ப்பரிக்கும் பூதமாய் இன்னும் வேண்டும் என அடம் பிடிக்கிறது இந்தக் கொடூர கொரோனா!! உலக மீட்பர்கள் தாங்கள் என்று தமக்குத் தாமே […]
சாபம் பொய்யாகட்டும் ….

மகா அசுரன் கொரோனாவின் கோரத்தாண்டவத்திலும் இனிய பல சம்பவங்கள் நிஜமாய் நிகழும்போது,,,, கல்மனம் கொண்ட மனிதனே உதவும் உள்ளங்களாக உலவும் போது,,,, கடவுளே கதவைச் சாத்திக்கொண்டபோதும், எமனே அஞ்சி ஒதுங்கிட, மருத்துவர்களோ…. கொரோனாவையும் நோயாளியையும் சவாலோடு சந்திக்கும்போது…. (சில )மனிதனே உன் இதயத்தில் இன்னுமா இரக்கம் பிறக்கவில்லை??? நீ காட்டுவாசியானதேனோ? மிருகத்தனமாய் தாக்குதல் தொடுத்து மருத்துவரின் மரண உடலையே கதறவைத்தாயே… சர்வ வல்லமையும் கொண்ட சமூகமே அதிர்ந்து போனதே… நீ , கொரோனாவை […]
கொரோனா

மென்மை எனும் இப்பூவுலகின் உண்மை நிறம் தன்மை மாற வன்மை கொண்ட மண்ணை ஆள்பவன் திண்மை நிரம்பி அதனை மாற்ற வந்ததோர் பிணி உலகில் மரித் தோர் பிண லட்சம் தரித் தோர் நுனி உயிரில் காத் தோர் எனக் கடவுள் நெஞ்ச மது பதைப தைக்க அச்ச மது அதைச்சி தைக்க தஞ்ச மது தனிமை யிருக்க மிஞ்சி யது மனிதம் காக்க காப் பாய் மனித சேனா வாழ்! தீய […]
கொரோனா பயம்

காலம் பொன் போன்றது இப்போதைக்கு விட்டு விடுங்கள் உயிர் அதைவிடப் புனிதமானது பயணத்தை நிறுத்துங்கள் உலகை உருவாக்கும் முயற்சியில் உங்கள் வாழ்க்கையை ஒப்புவியுங்கள் கண்களில் ஒளிக்கீற்றை வரவழைத்து மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் நம்பிக்கை என்ற ஒரு சிறு சொல்லே காலத்தை மாற்றும் அற்புதம் என்று நம்புவோமாக இதயத்துடன் இதயம் பேசுவோம் சொற்கள் மௌனித்து போகுமுன் உமக்காய் இன்னும் உம் மக்களுக்காய் உங்கள் கைகளைக் கழுவுங்கள் மரணத்துக்காய் திறக்கப்பட்ட பெருங் கதவை முழுவதுமாய் மூட உதவுங்கள் வெற்றுச் சாளரங்களின் […]
நீ கேட்டால் நான் மாட்டேனென்று

அவளருகே சென்றேன்.. அவயங்களைப் பருகினேன்.. அணைக்க முயன்றே அருகினில் நெருங்கினேன்… அதெல்லாம் இருக்கட்டும், அங்கேயே நில்லென்றாள்.. அங்கம் தொடாமலே அன்பினைக் காட்டென்றாள் …. காதலின் ஸ்பரிசம் காற்றுப்புகா நெருக்கம் காமனவன் கணைதவிர்த்துக் காத்திடும் மருந்துமன்றோ! காததூரம் நிற்பதற்குக் கால்கடுக்க வந்ததேனோ? காதலியே சற்றுமென்னைக் காருண்யமாய் நோக்கிடென்றேன்! இன்பமொரு எல்லைக்குள் இருப்பதுவும் முறைதானே இன்றந்தப் பெருமாசை இதயத்துள் எழுந்ததென இல்லத்துள் நீபுகுந்து இக்கணமே வாவென்பாய் இப்பேதை கொள்கவென இலைவிரித்துப் பரிமாறவோ? சாக்காடு என்றென்று சான்றோரும் கண்டிலரே சாதல் வருவதற்குள் […]
உழவுத் தொழில்

காலையில் எழுந்து கதிரவன் தொழுது கடமையை நாளும் செய்திடுவோம்! கதிரவன் கொடுத்த உழவுத்தொழிலை உயிர்மூச்சென்றே போற்றிடுவோம்! பஞ்சமில்லாமல் பார்ப்பதுயெல்லாம் பாரினில் அவனின் செயல்தானே! வஞ்சனை செய்து வாழ்வை அழித்தால் வீழ்வது பூமியில் நாம்தானே! உழவுத்தொழிலை உயிர்மூச்சாக்கி உழைத்தது நமது நாடன்றோ! உழவர் வாழ்வை உயர்த்தச் செய்வது உயர்ந்தோர் செய்யும் செயலன்றோ! பசியைப் போக்கிடும் உழவர் வாழ்வினில் பட்டினிச் சாவினைத் தடுத்திடுவோம்! பசுமை நிறைந்த பாரினைக் கண்டிட உழவர் வாழ்வினைப் […]
இதுவா வாழ்க்கை?

தொலைக்காட்சிப் பெட்டிநம்மின் வீட்டிற் குள்ளே தொகைகொடுக்க வந்தபின்னே புத்த கங்கள் விலைகொடுத்து வாங்குவதை நிறுத்தி விட்டோம் வீற்றிருந்து படிப்பதையும் விட்டு விட்டோம் ! அலைபேசி நம்கைக்கு வந்த பின்போ அழகான கையெழுத்தில் நலங்கள் கேட்டுக் கலையாக எழுதிவந்த கடித மெல்லாம் காணாமல் போனதுவே கையை விட்டே ! பொன்னாக மேசையின்மேல் கணினி வந்தே பொலிவாக […]