கதை
கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை

‘கிளப் ஹவுஸ் ஜவுளிக்கடை’, இது என்னப்பா பேர் புதுசா இருக்கேன்னு தோணுதுல்ல? எனக்கும் அந்த டவுட் வந்தது. தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நகரில் ஜவுளிக்கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. சிறிய கடைகள் முதல் பிரமாண்டமான பல அடுக்கு மாளிகைகளை உள்ளடக்கிய ஜவுளிக்கடைகள் இந்த நகரில் நிரம்பி வழியும். அதிலும் சென்னை தியாகராயநகரில் அமைந்திருக்கும் ரங்கநாதன் தெரு இதற்கு மிகப் பிரசித்தம். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டிப் போடுவது என்று சொன்னால் புரசைவாக்கம் தான். வேறு எங்கிலும் மக்கள் கூட்டத்தை […]
ஹலோ, நான் சுந்தர் பேசறேன் – பகுதி 1

பின்னணி தகவல் : டி.எஸ்.பி ராஜீவ், அவரது சைடு கிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் டிரைவர் மாணிக்கம் சென்னை நகரத்தில் நடக்கும் குழப்பமான குற்ற வழக்குகளைத் தனது கூர்மையான துப்பறியும் திறன் மூலம் தீர்ப்பதில் வல்லவர்கள். அவர்களால் தீர்க்கப்பட்ட பிற குற்ற வழக்குகளை படிக்க இந்த பனிப்பூக்கள் இணைப்பைச் சொடுக்கவும். ***** திருவான்மியூரில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராஜீவின் குடியிருப்பில் டிரைவர் மாணிக்கம் போலீஸ் ஜீப்பை நிறுத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளிருந்து வெளியே […]
திருமதி. ‘ஆகாச’ வேணி

2021 சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை “ஒரே தலையிடியா இருக்கே, புரூ காபி குடிச்சா தான் ஆகும்” என்றபடி துயில் கலைந்து எழுந்தாள் வேணி சுற்றும் முற்றும் பார்த்து குழம்பியவள், “நா எங்கிருக்கேன்? இது எந்தூரு? எங்கிருக்கீங்க மாமா?” என பதறியபடி எழுந்தமர்ந்தாள் “பெண்ணே” என்றபடி ஒரு வெண்தாடி உருவம் அருகே வர .. “யாருங்க நீங்க? வள்ளுவர் தாத்தா மாதிரி இருக்கீங்க” “நான் வள்ளுவனல்ல பெண்ணே, வல்லவன்” “அது சிம்பு நடிச்ச படமாச்சே” “யாரவன் சிம்பு?” “டி.ஆர் புள்ள” “டி.ஆரா?” “என்னங் […]
நான் ஒரு தடவை முடிவு செஞ்சிட்டா….

2021ஆம் ஆண்டு பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘அய்யயோ என்னால முடியல. Zumba வும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று அடுத்த வகுப்புக்கெல்லாம் போகாம இருக்கவில்லை. தொடர்ந்து போனேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த ஒரு மணி நேரம் வியர்வை சொட்டச் சொட்ட உடற்பயிற்சி மாதிரி அதை செய்திட்டு வந்தது மனசுக்கு உற்சாகமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருந்தது. எனவே நாம ஏதாவது ஒன்னு புதுசா செய்யனும்னு ஆசைபட்டாலோ அல்லது ஏதாவது வகுப்புல சேரணும்னு ஆசைபட்டாலோ […]
ஒரு விசித்திரமான கனவு

அவள் கண்களால் அதை நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை ; அதை பார்த்த பின் நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்து , மூச்சு வாங்கியது, ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுவது போல உடம்பிலுள்ள எல்லா நரம்புகளிலும் இரத்தம் ஓடியது , இரவு 10:00 மணியளவில் அந்த தூரத்து நடைபாதையில் ஒரு சிறு குழந்தை படுத்திருந்தது. தூத்துக்குடி – பேருக்குத்தான் மாநகரம் ஆனால் 10 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத இந்தத் தெரு பகுதி . அவள் […]
உயரம்

“என்னை எதுக்கு காப்பி ஷாப்புக்கு வரச்சொன்ன.கௌதம் ……..” இருவருக்கென போடப்பட்ட நாற்காலியில் ப்ரீத்திக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த கெளதம் காப்பியில் பறந்துகொண்டிருந்த ஆவியைப் பார்த்தவாறு இருந்தான். “வீட்டுல வேண்டான்னு சொல்றாங்க …..அ.. அதுதான் …” “ஓ…….. அப்ப பிரேக் அப்.. அப்படித்தானே …. நல்லாயிருக்கு கெளதம் “ ” ப்ரீத்தி……. புரிஞ்சுக்கோ அதுக்காக நான் உன்ன கூப்பிடுல ……..நம் இப்போ என்ன பண்றதுனு கேக்கத்தான் கூப்பிட்டேன் ………..” ” நீ ஆம்பள தான …….என்ன பண்ணறதுனு […]
ஒரு “டீ” பரிணாமம்

மாலை வெயில் இன்னும் குறையவில்லை. மினசோட்டாவில் கோடைக்கால வருகையைப் பறைசாற்றும் விதமாக ஆறு மணியாகிவிட்டிருந்தாலும் இன்னும் சுள்ளென்று முகத்தில் வெயில் அடித்து மணி மூன்று போல காட்டியது. வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே நுழைந்தாள் மது என்ற மதுரம். வழியில் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருந்த மலர்கள் இதமாக இருந்தது. கைப் பையை எடுத்துக் கொண்ட பொழுது, அதிலிருந்து அலைபேசி “கிர்ர்” என்று அடித்தது. எடுத்து கையில் பார்த்தாள். “ஹே கங்க்ராட்ஸ் பா ” […]
இதயத்தில் முள் தோட்டம் (தொடர் கதை – பகுதி 3)

(பாகம் 2) மூன்று மாதங்கள் மிக வேகமாக ஓடிவிட்டது. டி.எஸ்.பி ராஜீவுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு முட்டுச் சுவர்! அவருக்கு மேலிடத்திலிருந்தும், பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலிருந்தும் நிறைய பிரஷர் வர ஆரம்பித்தது. அதனால் சந்தேக நபர்களில் சிலரை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. எந்த ஆதாயமும் இல்லை, அவர்கள் அவரை மேலும் குழப்பும் விதமாகப் புதிய “லீட்ஸ்” கொடுத்தனர். அவரது நேரத்தை மேலும் அது வீணடித்தது. அன்று புதன்கிழமை. […]
கவிக் காதல்

“ஏன்னா… என்ன பண்ணிண்ட்ருக்கேள்?” .. கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள் லக்ஷ்மி. இரவு உணவு முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, ஆர்ட் புக்கில் எதையோ வரைந்து கொண்டிருந்த கணேஷ், “ஒண்ணுமில்லடி, ஏதோ படம் போட்டிண்டிருக்கேன்…” என்றான். அருகே வந்து என்னவென்று பார்க்க எத்தனித்தாள் லக்ஷ்மி. உடனடியாகப் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்து, அவளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டான். “என்ன.. என்ன அப்டி….. நேக்குக் காட்டக் கூடாதோ?” “இல்லடி… சர்ப்ரைஸ்…” கணேஷ். “சர்ப்ரைஸ் … ஓ… […]
இதயத்தில் முள் தோட்டம் – பாகம் 2

கவிதா இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகி விட்டது. தமிழக அரசியல் பிரச்சனைகள், ஸ்டெர்லைட் வகை போராட்டங்கள் என்று அவர்களுக்கு வேறு தீனி கிடைத்து விட்டதால், பத்திரிகை மற்றும் ஊடகங்களும் அவளை மறந்துவிட்டது என்றே சொல்லலாம். மக்களும் பிக் பாஸ் மற்றும் அன்றாட பிரச்சினைகளில் பிஸியாக இருப்பதால் கவிதாவைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ராஜீவுக்கு வாரத்தில் ஒரு முறையாவது சண்முகத்திடமிருந்து ஃபோன் கால் வருகிறது. அவர் அவளை மறந்ததாகத் தெரியவில்லை. திருவான்மியூரில் உள்ள போர்ஷே குடியிருப்பில் […]