போட்டிகள்
புத்தொளி பிறந்தது !

வாசலில் இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன். கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். […]
சிறுகதை போட்டி

பல்லாயிரம் ஆண்டுகளாக கதைகள் சொல்லியும் கேட்டும் வளர்ந்தவர்கள் தமிழர்கள். உலகமெலாம் அதி நவீனம் ஆக்கிரமித்திருந்தாலும் அறைக்குள் அமர்ந்து கதை படிப்பது அலாதி சுகம்! கதை படிப்பது சுகமென்றால் ஓர் கதை வடிப்பது சுகமோ சுகம். நம்மில் பலரில் ஒளிந்திருக்கும் புனைவுத் திறனை புவியறிய வெளிக்கொணரும் வகையில் பனிப்பூக்கள் சஞ்சிகை சிறுகதை போட்டியினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. பனிப்பூக்கள் நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் […]
எழுதுங்கள் வெல்லுங்கள் – கவிதைப் போட்டி முடிவுகள்

பல மாதங்களாக எங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஆழ்ந்து படிக்கையில் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் புதுமையான கவித்திறன் ஒளிந்திருப்பதை உணர முடிந்தது. இவர்களின் திறமையை வெளிக்கொணரும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்த எண்ணினோம். இவர்களின் கற்பனைத் திறனுக்கு ஒரு தலைப்பைக் கொடுத்து எண்ணங்களைச் சிறைப்படுத்தாமல், அதே சமயம் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வையோ, விஷயத்தையோ கருவாகக் கொண்டு எழுத வைத்து கவிதைகளைப் பெற எத்தனித்தோம். அதன்படி உருவானது தான் ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ எனும் – படத்துக்குக் கவிதை எழுதும் […]
ஒடுங்கிப் போன நெஞ்சம்

வீதியின் ஓரத்தில் ….!
ஒதுங்கிப் போன சொந்தங்கள்;….!
உதறிப் போன பந்தங்கள் ….!
மூட்டை தூக்க முடியவில்லை
முடக்கி போட்டது முதுமை….!
தாத்தா – பெண்

இயற்கை அழகை எல்லாம்
அள்ளிப் பருகி – ஒளி இழந்து
இன்று அமைதியாய்
அடங்கிப் போனது விழிகள்!
சிறுமி – பெரியவர்

அண்ட ஒரு இடமில்லையோ?
அன்னமிடக் கையில்லையோ ?
ஆதரிக்க உறவில்லையோ?
ஆதரவே சிறு பலகை தானோ?
வறுமை வசந்தமாகிறது!

தொலைந்த நாட்களுக்குக் கிடைத்தபரிசுதான்
தொங்கிப் போன தாடியும்
சுருங்கிப் போன சட்டையும்
மனம் இருந்திருந்தால்
சுயமானத்தை இழந்திருக்க மாட்டேன்
இன்னும் என் கண்ணில் உள்ளது
ஒளி
நம்பிக்கை

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
அமெரிக்கா
உனக்கும் எனக்கும் ஒரே மொழி
ஆங்கிலம்
உனக்கும் எனக்கும் ஒரே ஆடை
கந்தலாடை
முறிந்த மொட்டுக்கள்

தெருக் கோடியில் அட்டை பிடித்து நிற்கிறார் மூத்தவர்
நரைத் தாடியில் சட்டைக் கிழிந்து நிற்கிறார் மூத்தவர்
இளம் வயதில் படை வீரனாய் ஓட்டினார் கப்பலை
இன்று வீதியில் கடும் வெய்யிலில் நிற்கிறார் மூத்தவர்
ஒரு அபலையின் அழுகுரல்

உதைபட்ட பந்தாக உருண்டோட
உறவினரால் நிலைகுலைந்து போனேன்!
எதைச் சொல்லி நான் அழுவேன் இன்று
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்
என்னை விட்டுச் சென்றவர் வருவார் என்று
வாடிய என் முகத்தில்
கண்ணீர் கூட இல்லை அழுதுவிட