வலையொலி
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்

இன்று பிறந்தநாள் காணும் திரைப்பட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களைப் பற்றிய, அவருடைய படங்கள், படத்தின் இசை மற்றும் பாடல்கள் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – செந்தில் & சரவணன். பிறந்தநாள் வாழ்த்துகள், கௌதம் வாசுதேவ் மேனன்.
பத்தாவது ஆண்டில் பனிப்பூக்கள்

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பனிப்பூக்களின் பயணம் குறித்த ஒரு உரையாடல். உரையாடியவர்கள் – மதுசூதனன், ரவிக்குமார், யோகி தொகுப்பு – சரவணகுமரன் பயணம் குறித்த சிறு காணொலி.
HBD ஹிப் ஹாப் ஆதி

இசைக்கலைஞர் ஹிப் ஹாப் ஆதி, தமிழ் இசைத்துறையிலும் தமிழ்ச்சமூகம் சார்ந்த பிற முன்னெடுப்புகளில் ஆற்றி வரும் பங்களிப்புகளைப் பற்றிய ஓர் உரையாடல். ’ஹிப் ஹாப் தமிழா’ ஆதி அவர்களுக்குப் பனிப்பூக்களின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எறிகணை புத்தக அறிமுக விழா

எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ […]
சங்கீத கலா வித்தகர் டி.என். பாலமுரளி பேட்டி

கனடாவில் வசிக்கும் பன்முக இசை கலைஞர், ஆசிரியர், சங்கீத கலா வித்தகர் திரு. டி.என். பாலமுரளி அவர்கள் பனிப்பூக்களுக்கு வழங்கிய இப்பேட்டியில் அவர் தனது இசை பின்னணி குறித்தும், இசை அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். உரையாடியவர் – திருமதி. லக்ஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
கடம் ஆராய்ச்சி

கடம் இசையில் உலகப் புகழ்பெற்ற திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் இந்தப் பகுதியில் கடம் குறித்த அவருடைய ஆராய்ச்சி குறித்தும், இத்துறையில் அவர் அடைந்த அங்கீகாரங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் படத்தொகுப்பு – சரவணகுமரன்
கடம் இசையில் சின்ன சின்ன ஆசை

கடம் கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்கள் தனது இசை வாழ்க்கை பயணத்தை நம்மிடம் பகிர்ந்து வருகிறார். உரையாடலின் இரண்டாம் பாகத்தை இங்குக் காணலாம். உரையாடியவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒளிப்பதிவு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – திரு. சரவணகுமரன்
விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்

உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு – சரவணகுமரன் காணுங்கள்.. பகிருங்கள்..
பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம். தொகுப்பு – சரவணகுமரன்.
புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார். கேளுங்க.. பகிருங்க..