மொழியியல்
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம் பிணங்கள் கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!!! பொட்டிலடித்தாற் போன்றதொரு தத்துவ விளக்கம் நான்கு வரிகளிலே. செத்துக் கிடக்கும் இன்றைய பிணத்தருகே, நாளை சாகப் போகும் இன்னொரு பிணம் அழுகிறதாம். மனித வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை இதைவிட அழகாகவும், எளிதாகவும், சுவையுடனும் கூறிய ஒப்புயர்வற்ற தமிழ்க் கவி, சித்தர் பட்டிணத்துப் […]
வேற்றுமையில் ஒற்றுமை

திருக்குறளின்வழியே “வேற்றுமையில்ஒற்றுமை” “பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்சிறப்பொவ்வா செய்தொழில்வேற்றுமையான்” ( குறள் 972) திருக்குறள் முன்னுரை: “தித்திக்கும் தெள்ளமுதாய், திகட்டாததேன்கனியாய், எத்திக்கும்நிறைந்திருக்கும் செந்தமிழ் மாங்கனியின் சுவையினைத் தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றைப்போல வள்ளுவன் உரைத்த இரண்டடித் திருக்குறளின் சிறப்பினைப்பற்றிச் சிறிது காண்போம். பெருமை: “யாமறிந்தமொழிகளிலேதமிழ்மொழி போல்இனிதாவதுஎங்கும்காணோம்.” -பாரதியார் – தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றிக் கூறிட வார்த்தைகள் போதாது, வாழ்ந்து பார்த்தால் தான் உணர்ந்திட முடியும். அத்தகைய வாழ்வினை சிறப்பாக வாழ்ந்திடவும், வாழ்வின் பொருளுணர்ந்து செயல்படவும் வள்ளுவன் தனது நூலில் இயற்றிய குறள் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 11

அத்தியாயம் 10 செல்ல இங்கே சொடுக்கவும் போன அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது நான் தாய்லாந்தில் பேசப்படும் “தாய்” மொழி பற்றி பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு எனக்கு தூக்கமே வரலை. தாய்லாந்து என்ற வார்த்தையில ஒரு பாதியான ”தாய்” நல்ல தமிழ்ல இருப்பதாகவும் மற்றொரு பாதி லாந்து(land) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாகவும் பட்டது. எனக்கு அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று மட்டும் பட்டது. இதுவும் […]
தமிழனென்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!!

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி..” – தமிழ் மொழி ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி..” – தமிழ்க் குடி.. காலங்கலாமாய் பலரும் மேடையேறி முழங்கும் வசனம் இது. கல் மற்றும் மண் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் மொழியாம். உருவகமாய்க் கூறப்பட்ட இதன் அர்த்தம், தமிழ் மொழியும், தமிழ் இனமும் மிகவும் பழமையானது என்பதே. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

தினம் வழக்கமாக உதிக்கும் ஞாயிறுடன் ஃபிப்ரவரி 7, 1902 அன்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும் உதித்தார். நெடிய நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழன்னை அன்று பெரிதும் மகிழ்ந்திருப்பாள். அவள் பெறுமை உலகறியச் செய்ய அரிமா ஒன்று பிறந்ததென்று. மெத்தப் படித்தோர் நிறைந்த நெல்லைச் சீமையில் ஞானமுத்து, பரிபூரணம் தம்பதியினருக்குப் பாவாணர் பத்தாவது மகவாகப் பிறந்தார். தேவநேசன் என்பது இவர் இயர் பெயர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளுடன் இலத்தீனம், […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 10

அத்தியாயம் 9 செல்ல இங்கே சொடுக்கவும் மலாய் மொழி ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, ஃபிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. Dr. ரொலண்ட் பிராடெல்,முனைவர் சத்தியானந்தா, மற்றும் ஆய்வாளர் சஞ்சிவி ஆகிய மூவருமே மலாயாவிற்கு நாகரிகத்தை அளித்தவர்கள் தென்னாட்டுத் தமிழர்களே எனக் கருதுகின்றனர். மலாயா என்னும் பெயரிலே தமிழ் மணங்கமழ்வதை போன்றே சிங்கப்பூர் என்ற பெயரிலும் தமிழ் மணம் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 9

அத்தியாயம் 8 செல்ல இங்கே சொடுக்கவும் கி. பி. 48ஆம் ஆண்டு சமயத்தில், இன்றைய இந்தியாவைச் சேர்ந்த இளம் பேரழகியின் கனவிலும் கொரிய இளவரசன் சுரோவின் கனவிலும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தோன்ற இருவரும் காதல் வயப்படுகின்றனர்.இந்தியப் பேரழகி மரக்கலம் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரிய தீபகற்பத்தை அடைகின்றாள். இளவரசன் சுரோவை மணந்து கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறார்.. அவர்களுக்கு 12 வாரிசுகள் இருந்தனர். அரசி இறக்கும்போது தங்கள் குழந்தைகளை அழைத்து “அம்மா, அப்பா” என்று […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 8

அத்தியாயம் 7 செல்ல இங்கே சொடுக்கவும் சப்பானியத்தில் புலமைப் பெற்ற நண்பர் யோகியை போன வாரம் தமிழ்ப் பள்ளியில சந்தித்த போது, சப்பானிய மற்றும் தமிழ் மொழித் தொடர்பு ஆய்வுகள் இன்று பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 1000க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சப்பானியத்தில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னாங்க. நான் போன அத்தியாயத்துல நானூறு தமிழ்ச் சொற்கள் சப்பானியத்துல இருப்பதாகச் சொன்னது பழைய தரவுகள் என்றும் சொன்னாங்க. சப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய தீபகற்பம் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 7

அத்தியாயம் 6 செல்ல இங்கே சொடுக்கவும் உலகின் மிகப்பழமையான நாகரிகங்களான சிந்துச் சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், சீன நாகரிகம் மற்றும் மாயன் நாகரிகங்களில் தமிழ் மற்றும் தமிழரின் தொடர்புகளை உறுதிப்படுத்தப் பல சான்றுகள் உள்ளன. உலகில் ஒவ்வொரு நாளும் சூரியன் முதலில் உதிக்கும் ஜப்பான் நாட்டின் மொழியான யப்பான் மொழி முதல் ஒவ்வொரு நாளும் சூரியன் கடைசியாக மறையும் அமெரிக்க சுமோன் தீவின் ஆதி மொழியான சுமோன் மொழி வரை, கிட்டத்தட்ட எல்லா பிரதேசங்களிலுமுள்ள மொழிகளுக்கும் […]