கலாச்சாரம்
உலகச் செம்மொழி – அத்தியாயம் 6

போன அத்தியாயத்த படிச்ச என் நண்பர் ஒருத்தர் நீங்க பல நாடுகளின் பெயர்கள் தமிழ் மூலத்தை கொண்டு இருப்பதை எழுதியிருந்தீங்க .
ஆனா தமிழர்களின் பெரும் நிலப்பரப்பான தமிழகம் இணைந்திருக்கும் இந்தியாவின் பெயர் எந்த மொழி மூலத்திலிருந்து வந்ததுன்னு சொல்ல முடியுமானு கேட்டிருந்தாங்க. இந்தியா என்ற சொல்லுக்கு சிந்து என்ற தமிழ்ச் சொல்தான் மூலச் சொல்னு சொல்லுறாங்க.
சிந்து என்ற அழைத்தற்கு பல்வேறு காரணங்கள் சொல்லுறாங்க.
சிமை என்ற சொல் பனியை குறிக்கும் மற்றுமொறு செந்தமிழ் சொல். இந்த சிமை உருகி தண்ணீராக சிந்தியதால் உருவான நதி சிந்து நதி.
மூவர் தேவாரம்

ஓம் நம்ச்சிவாய!
தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.
மாதத்தின் மாமனிதர் – பெரியார்

சமுதாயத் தொண்டு செய்பவருக்கு, கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மத பக்தி இருக்கக்கூடாது, தேசபக்தி இருக்கக்கூடாது, ஏன் மொழிபக்தி கூட இருக்கக்கூடாது, சமுதாய பக்தி ஒன்றுதான் இருக்க வேண்டும் அவனால் தான் ஏதாவது செய்ய முடியும். எவன் ஒருவன் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ, இலக்கியத்தையோ, மொழியையோ கைல வச்சுக்கிட்டு சமுதாயத் தொண்டுச் செய்யுரான்னா, அவன் சோறுண்பவன் அல்ல. இதைப்போன்று தெளிவாகவும் தைரியமாகவும் ஒருவரால் பேச முடியும் என்றால் அது பெரியார் என்றழைக்கப் படுகிற ஈ.வே.இராமசாமியால் மட்டுமே முடியும். மேற்கூறிய […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 5

ஆஸ்திரேலியா என்ற நாட்டின் பெயருக்கான தமிழ் மூலத்தை போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆங்கில மூலச்சொல்லகராதியில் ஆஸ்திரேலியா என்ற சொல் லத்தினிய மொழியில் இருந்து வந்ததாக இருக்கின்றது.
அன்னையர் தினக் கவிதை

கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
மாதத்தின் மாமனிதர் – மேதகு ஜவகர்லால் நேரு

மே மாதத்தின் மாமனிதராக யாரை நினைவு படுத்தலாம் என்று ஆராய்ந்த பொழுது தமிழினத்தையும் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பாக எழுதி இருக்கும் அவரை நினைவு கூர்தல் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரி, அவர் சார்ந்த கட்சிக்கு கொள்கை இல்லை என்றாலும் நேர்மையான பொதுவுடைமைக் கொள்கையையும் நியாயமான கூட்டாட்சி கோட்பாட்டையும் முன்மொழிந்தார், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்தது வேறு விடயம். 542 பிரதானச் சிற்றரசுகளையும் பகுதிகளையும் உள்ளடக்கி தங்களின் மொழி, […]
காந்தர்வக் குரலோன்

இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார், தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை […]
பொருளுடன் திருக்குறள் – அந்தாதி வடிவில்

குறள் பொருள் வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (861) நம்மிலும் வலிய பகைவரை எதிர்ப்பதைத் தவிர்த்து; நம்மிலும் மெலியரை உடனே எதிர்த்துச் செல்க. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். (146) பிறர் மனை நோக்குபவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகாது. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (571) அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் கொண்டவர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் […]
ஈழம் – மதுரை சங்ககால இலக்கியத் தொடர்புகள்

தேவதட்சனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப் பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்குக் காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அழைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது. ‘ஈழம்’ என்ற பெயரால் பண்டைக் காலத்தில் இலங்கை அழைக்கப் பெற்றமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருள் ஆய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதே வேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் “ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்”(1) என்ற வரி முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றது. ஈழம் என்றால் ‘பொன்’(2) […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 4

அத்தியாயம் 3 செல்ல இங்கே சொடுக்கவும் வணக்கம்! மனிதகுலம் தோன்றி வளர்ந்து பரவிய விதத்தை இருவிதக் கொள்கைகளில் விளக்குகின்றனர். 1.மேல்நாட்டவர் சொல்கின்றபடி மனித இனம் ஆப்பிரிக்கா பகுதியில் தோன்றி உலகம் முழுதும் பரவியது. 2.தென்னாட்டு அறிஞர்களின் கருத்தான மாந்த இனம் முதலில் கடல் கொண்ட தென்னாடான குமரிக்கண்டம் என்ற இலமுரியா கண்டத்திலேயே தோன்றி உலகம் முழுதும் பரவியது. இந்த இரண்டு கருத்துக்களுக்கும் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டாலும், அவற்றை ஆராய்வது நம் நோக்கமில்லை. தமிழ் அறிஞர்களின் கூற்றுப்படியும் நம் […]