\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கலாச்சாரம்

சொற்சதுக்கம் – 2

சொற்சதுக்கம் – 2

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)

Continue Reading »

கலைவாணர்

கலைவாணர்

”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே  சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும்  இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]

Continue Reading »

யார் அந்த இராவணன் – பகுதி 2

யார் அந்த இராவணன் – பகுதி 2

(யார் அந்த இராவணன் – பகுதி 1) இலங்கைத் தீவு உருவான கதை இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், […]

Continue Reading »

அரிச்சுவடி நிறந்தீட்டல்

அரிச்சுவடி நிறந்தீட்டல்

Continue Reading »

சொற்சதுக்கம்

சொற்சதுக்கம்

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். ல உ க ப ம் ட ஓ டு த தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)  

Continue Reading »

நடிப்புலகச் சக்கரவர்த்தினி

நடிப்புலகச் சக்கரவர்த்தினி

”சிக்கலாரே, எப்டி இருக்கீய…. சொகமா இருக்கீயளா……….. அடி ஆத்தி…. இந்த நாயனத்துல வாசிச்சுக் காட்டுங்க…… ஏஏஏஏஏஏன்…..” தில்லானா மோகனாம்பாளில் எல்லா நாதஸ்வரத்திலும் அதே சங்கீதம்தான் வருகிறதா, அல்லது சிக்கல் சண்முகசுந்தரம் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) வாசிக்கும் நாதஸ்வரம் மட்டும் சிறப்பாகச் செய்யப்பட்டதா என்று கேள்வி கேட்கும் நேரத்தில், ஒரு நிமிடம் சிவாஜி என்ற மாபெரும் ஜாம்பவான் அதே காட்சியில் இருக்கிறார் என்பதே நமக்கு மறந்துவிடுமளவுக்கு அதிகமான ஆளுமையுடன் நடிப்பதற்கு இயன்ற ஒரு சில நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர். […]

Continue Reading »

யார் அந்த இராவணன் பகுதி – 1

யார் அந்த இராவணன் பகுதி – 1

வலவன் ஏவா வான ஊர்தி விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்கக் காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட்  (Orville Wright)  வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் (Wright brothers) முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் […]

Continue Reading »

கர்ம வீரர்

கர்ம வீரர்

சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள் – அன்று நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள் – காம ராசரைப் பெற்ற தாயோ நாட்டிற்காகவே பெற்றாள் !!! -கவியரசு கண்ணதாசன்- ”பெருந்தலைவர்”, “கர்ம வீரர்”, “கிங் மேக்கர்”, “படிக்காத மேதை”, “கருப்பு காந்தி” எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களும், புகழும் பெற்ற, இந்த நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் 40 ஆவது நினைவு தினம் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வந்து […]

Continue Reading »

புதிர் – புதைந்திருக்கும் சொற்கள்

புதிர் – புதைந்திருக்கும் சொற்கள்

கீழேயுள்ள படத்தில் புதைந்திருக்கும் இரண்டு எழுத்துக்களினாலோ, அல்லது அவற்றிற்கும் மேலான எழுத்துக்களைக் கொண்டு அமையும் தமிழ் சொற்களைக் கண்டுபிடிப்பீர்களா?   (புதிர் – புதைந்திருக்கும் சொற்கள் – விடைகள்)

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 18

உலகச் செம்மொழி – அத்தியாயம் 18

(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்) அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad