கலாச்சாரம்
உலகச் செம்மொழி – அத்தியாயம் 8

அத்தியாயம் 7 செல்ல இங்கே சொடுக்கவும் சப்பானியத்தில் புலமைப் பெற்ற நண்பர் யோகியை போன வாரம் தமிழ்ப் பள்ளியில சந்தித்த போது, சப்பானிய மற்றும் தமிழ் மொழித் தொடர்பு ஆய்வுகள் இன்று பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 1000க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சப்பானியத்தில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னாங்க. நான் போன அத்தியாயத்துல நானூறு தமிழ்ச் சொற்கள் சப்பானியத்துல இருப்பதாகச் சொன்னது பழைய தரவுகள் என்றும் சொன்னாங்க. சப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய தீபகற்பம் […]
ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு – காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடுகளான நீதி, நேர்மை, அகிம்சை இவற்றை அடியொற்றிச் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவர். உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராக இருந்தவர். 1947 முதல் 1964 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். 1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேருவுக்கும், ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால். உருது மொழியில் ஜவஹர்-இ-லால் என்றால் சிகப்பு நகை என்ற பொருள். ரோஜா நிறத்தில் பிறந்த குழந்தைக்குப் […]
சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சேர இளவரசன் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இவர் புகழ் பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அறியப்படுகின்றது. இக்கதை அந்த நாட்களின் பெரும் அரசுகளான சேர சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலை நகரும் கடற்கரைப் பட்டிணமும் கடல் கொண்டதுமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் மற்றும் அவனது மனைவியான கண்ணகியினது கதையைக் கூறுவதே இந்நூல். இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒரு சாராரும் எட்டாம் நூற்றாண்டில் […]
இந்திரா காந்தி

ஆணாதிக்க மனப்பாங்கு கொண்டஇந்தியாவில் வலுவான அதிகார பலத்துடன் மிகவும் உயர்ந்த பதவியிலமர்ந்து நாட்டை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி இந்திரா காந்தி. 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், ஜவஹர்லால் நேருவுக்கும் , கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சினி நேரு. அவர் பிறந்த கட்டத்தில் அவரது தாத்தாவும், தந்தையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தனது நோயுற்ற தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார் இந்திரா. காவலதிகாரிகள் நேரு சிறையிலிருந்த காலத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்து […]
கலிங்கத்துப்பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர். கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் […]
திருப்புறம்பியம்

காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]
மகாத்மா

உலகில், நோம்பு நோற்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததே இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் கூற்று. சாப்பாட்டைக் குறைத்து, ஏதோவொரு கடவுளின் பெயரை நாள் முழுதும் சொல்லிக் கொண்டிருப்பதல்ல வள்ளுவன் கூறும் நோம்பு. செயல் திருத்தம் என்பதே நோம்பு எனும் தமிழ் வார்த்தையின் சிறப்புப் பொருள் மற்றும் தத்துவார்த்தமான விளக்கம். தான் செய்யும் தவறுகளை உணர்ந்து, செய்யும் செயல்களைத் திருத்திக் கொண்டு நல்வழிப் படுவது என்பது நோம்பாகும். அதுபோல் நல்வழிப் படுபவரின் எண்ணிக்கை குறைவதே, பொருளில்லை, புகழில்லை, மகிழ்ச்சி இல்லை, அமைதி இல்லை எனப் பலவகையானவை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்பது வள்ளுவனின் விளக்கம்.
லால் பகதூர் சாஸ்திரி

பாரத நாட்டின் பெருந்தலைவர்கள் பலரை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. பலரது தியாகங்களும் உயர்ந்த கொள்கைகளும் அறியப்படாமலே போய்விட்டன. ஆங்கிலத்தில் ‘UNSUNG HERO’ என்பதைப் போன்று இவர்கள் அதிகம் புகழ் பெறாத, கண்டுக்கொள்ளப்படாத தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான் மறைந்த பாரதப் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி. காந்தியைக் கொலை செய்த கோட்சேவை அறிந்தவர்களை விட காந்தியக் கொள்கைகளை இறுதி மூச்சு வரை வேதமாக கடைப்பிடித்த சாஸ்திரியை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவரின் படாடோபமற்ற எளிய தோற்றமும் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 7

அத்தியாயம் 6 செல்ல இங்கே சொடுக்கவும் உலகின் மிகப்பழமையான நாகரிகங்களான சிந்துச் சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், சீன நாகரிகம் மற்றும் மாயன் நாகரிகங்களில் தமிழ் மற்றும் தமிழரின் தொடர்புகளை உறுதிப்படுத்தப் பல சான்றுகள் உள்ளன. உலகில் ஒவ்வொரு நாளும் சூரியன் முதலில் உதிக்கும் ஜப்பான் நாட்டின் மொழியான யப்பான் மொழி முதல் ஒவ்வொரு நாளும் சூரியன் கடைசியாக மறையும் அமெரிக்க சுமோன் தீவின் ஆதி மொழியான சுமோன் மொழி வரை, கிட்டத்தட்ட எல்லா பிரதேசங்களிலுமுள்ள மொழிகளுக்கும் […]
காஞ்சிபுரம்

தமிழ் கூறும் நல்லுலகில் காஞ்சி ஒரு பழமையான நகரம். கல்வியில் சிறந்ததோர் காஞ்சி என்னும் வழக்குச் சொல்லிலிருந்தே இந்நகரின் பெருமை புரியும். காஞ்சி என்ற சொல்லிற்கு அணிகலன் என்று பொருள் கொள்வர். முற்காலத்தில் இவ்வூர் கச்சி அல்லது கச்சிப்பேடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இதற்கு ”பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே !” போன்ற வரிகளே சாட்சி. நகர நாகரிகங்கள் எப்பொழுதுமே ஆற்றங்கரையிலேயே அமையும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, இந்நகரும் பாலாற்றங்கரையில் செழிப்பான பகுதியில் அமைந்துள்ளது. காஞ்சி மரங்கள் மிகுதியாக இருந்த […]