ஆன்மிகம்
திருவிவிலிய கதைகள்: நீதிமானுக்கு சோதனையா?

திருவிவிலியத்தின் (பைபிள்) ஞான இலக்கியங்களுள் ஒன்று பழைய ஏற்பாட்டில் உள்ள யோபு என்னும் நூல். இது இலக்கிய நடையில் அமைந்த நூல். அதுல சொல்லியிருக்கும் ஒரு நிகழ்வை இப்பப் பார்க்கபோறோம். நம்முடைய தின வாழ்க்கையில…. அந்த நல்ல மனுஷனுக்கு இவ்வளவு சோதனையா… கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை…. நான் என பாவம் செய்தேன்….. எனக்குப் போய் இப்படி நடக்குதே…. இப்படிப் பலரும் சொல்லக் கேட்டிருக்கோம். அவையெல்லாம் சோதனையா?……. தண்டனையா?….. ஒரு காலத்தில யோபுன்னு […]
எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை

திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும். என்ன வியப்பாயிருக்கா? ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார். அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம். கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில […]
பகுத்தறிவு – பகுதி 2

(பகுதி – 1) இந்தப் பகுதிக்கான முன்னுரையை எழுதி இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டாம் பகுதி எழுதும் “மனநிலை” (மூட்) வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கடவுளுக்கு நான் இதுபற்றி எழுதுவது பிடிக்கவில்லையோ? அவன்தான் தனது திருவிளையாடலினால் எனக்கு “மூட்” வரவிடாமால் செய்கிறானோ? இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடவுளுக்கு இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களில், அடுத்த வீட்டு மனிதருக்குக்கூட அவ்வளவாக அறிமுகமில்லாத என்னைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருப்பது சாத்தியமோ? அப்படியே தெரிந்து […]
ஞாயிறே போற்றி!

தமிழ் மக்கள் கொண்டாடும் விழாக்களில் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. உழவர்கள் திருநாள் என்றும் இதைக் கூறுவர். இந்தத் திருநாளின் இன்னொரு சிறப்பு இது சூரியப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கிலிருந்து வடக்கு முகமாக நகர்வது இந்த நாளின் சிறப்பு. நம் அனைவரும், ஏன் இவ்வுலகில் உள்ள அனைத்தும் நட்சத்திரத் துகள்களால் ஆனது என இயற்பியல் கூறுகிறது. நாம் உண்ணும் காய்கறிகள் எல்லாம் கதிரவனின் கதிரொளியை உணவாக உண்டு வளர்ந்தவை. கடல் தண்ணிரை மேகமாக மாற்றி, வயலுக்கு […]
திருவிவிலியக் கதைகள்: மன்னிப்பே மகிழ்ச்சியின் ஊற்று

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் பனிப்பூக்கள் இதழின் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைமகனான இயேசு பாலன் அன்பையும் சாமாதானத்தையும் நற்சுகங்களையும் நிரம்ப அருள வாழ்த்துக்கள். “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பது ஆழமான கருத்துடைய தமிழ்க் கூற்று. அன்பும் சமாதானமும் என்றன் வீட்டையும், நாட்டையும் ஏன் உலகத்தையே பிணைக்க வல்லது. அப்பேற்பட்ட அன்பும், சமாதானமும், மன்னிப்பும் நம்ப குடும்பத்தில இருக்கணும். அப்போதுதான குடும்பத்தில மகிழ்ச்சி இருக்கும். முன்னொரு காலத்தில நடந்த……….. அப்படின்னு சொல்லுறதவிட, 6000ம் ஆண்டுகளுக்கு முன்னாடி […]
திருவிவிலிய கதைகள் – நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க, இன்னைக்கு நேற்று இல்ல, ஆதி காலத்திலிருந்து அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது. சரி இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம். கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, […]
குருதேவ் தீப யாத்திரை

>> English Versionஹரி ஓம்! நம் வாழ்க்கையில் நம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளன. அதை உரிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியம். பிறந்தவுடன் தாய் தந்தை நமக்கு முதல் குரு. பள்ளிப் பருவத்தில் பள்ளி வாத்தியார் நமக்கு இரண்டாம் குரு. அதே போல், முறையாக ஆன்மிகம் பயில நமக்கு ஒரு குரு அவசியம். வசிஷ்டர், சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், ராகவேந்திரர், ரமணமஹரிஷி, சின்மயானந்தா என பல குருமார்கள் தோன்றி மறைந்துள்ளனர். குரு சின்மயானந்தா […]
தீபாவளித் திருநாள்

ஹிந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் மிகப் பிரசத்தி பெற்றது தீபாவளிப் பண்டிகையாகும். கொண்டாடப்படும் எல்லாப் பண்டிகைகளுக்கும் ஒர் அர்த்தம் உண்டு. அதைப் புரிந்து கொண்டாடுவதே நலம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள் வாழையடி வாழையாகத் தலைமுறை தலைமுறையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இன்றைய காலக்கட்டதில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்று வருவதால், கற்றுக் கொடுக்க நேரம் கிடைப்பதில்லை. இந்தப் பண்டிகையின் சிறப்பை ஒரு கட்டுரையில் கூற முடியாவிட்டாலும், அதன் விளக்கத்தை மேலெழுந்த அளவில் தொடங்கி வைப்போம். ஒரே […]
பகுத்தறிவு – 1

இன்றைய நிலையில், தமிழ் பேசும் பலரும் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என்ற முடிவுக்கே வந்து விட்டனர். கோயிலில் இருக்கும் சிலை கல்லென்றும், அதனைப் பூஜிப்பது மூட நம்பிக்கையென்றும் பறை சாற்றும் ஒரு கூட்டம் தெருமுனைப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கற்சிலைகளைச் செருப்பாலடிப்பது எப்படி புத்திசாலித்தனமென்று நம் சிற்றறிவிற்கு எட்டவில்லை. கல்லைக் கடவுளாய் நினைத்துப் பூஜிப்பது முட்டாள் தனமென்றால், கல்லை எதிரியாய் நினைத்துச் செருப்பாலடிப்பதும் முட்டாள் தனந்தானே? அண்ணாசாலையில் இருக்கும் தலைவர்களின் சிலை மட்டும் எவ்வாறு […]