நிகழ்வுகள்
தமிழ்ச் சங்கக் கோடைச் சுற்றுலா – பெற்றோர் நேர்காணல்

கோடையில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சுற்றுலாவில், பனிப்பூக்கள் குழுவினர் சிலர் பங்கேற்றோம். பொழுதுபோக்கும் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் குழந்தைகளும் பெற்றோரும் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் காண வந்திருந்த மூத்தவர்கள் பரவசத்துடன் அவர்களைக் கண்டு மகிழ்ந்திருந்தனர். அமெரிக்க நாட்டை பற்றியும், குறிப்பாக மினசோட்டாவிலுள்ள தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றிய அவர்களது கருத்தையறிய மினசோட்டாவில் தங்களது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்கு வந்திருக்கும் திரு. கண்ணன், திருமதி. மோகனா அவர்களை எங்களது பனிப்பூக்கள் இதழுக்காக […]
ஆதிவாசி அமெரிக்க வாச்சீப்பி ஒன்றுகூடல்

மினசோட்டா மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதிவாசிகள் தாம் லக்கோட்டா மக்கள். எமது மாநிலத்தில் பல ஆதி மக்கள் ஒன்று கூடல்கள் நடைபெறுகின்றன. எனினும் வருடா வருடம் எமக்குப் பக்கத்தில் வைச்சிப்பி நடன ஒன்று கூடல் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் வரும் வெள்ளி தொடங்கி சனி மற்றும் ஞாயிறுகளில் நடைபெறுகிறது. இம்முறை சாக்கப்பீ மிடேவாக்கட்டன் சூ ஆதிவாசிகள் சமூகம் ஆகஸ்ட் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தமது மைதானத்தில் வாசீப்பியைக் கொண்டாடியது. வாச்சீப்பி என்றால் என்ன? […]
முத்தமிழ் விழா – பட்டிமன்றம்

தலைப்பு: குழந்தைகள் தமிழ் கற்பது பெரிதும் குறைந்ததற்குக் காரணம் சூழ் நிலையா அல்லது பெற்றோர்களா? அண்மையில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நிரம்பிய முத்தமிழ் விழாவினை நடத்தினர். தமிழ்ப் பற்றும், ஆர்வமும் கொண்டு, குழந்தைகள், பெரியோரென நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு தமிழ்ப் பேராசிரியை திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விழாவினை தொடக்க முதலே ரசித்த அவர், தனது சிறப்புரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பெருமைகளையும் கோடிட்டுக் காட்டினார். […]
புறநானூறுக்காக ஒரு புனிதப் பயணம்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் தமிழார்வலர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடியும், பல்வழி அழைப்பிலும் திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைப் படித்து, பொருளறிந்து, விவரித்து, விவாதித்து, ரசிக்கிறார்கள். இவர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் படித்து முடித்தமையைக் கொண்டாட ஒரு விழா எடுத்தனர். ஆம்! வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து “புறநானூறு பன்னாட்டு மாநாடு” ஒன்றை ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில், மேரிலாந்து மாநிலம் […]
கவிஞர் ஈரோடு தமிழன்பன்

” எதற்கப்பா எதுகை மோனை மின்னலைப் பிடித்து வைக்கவா சட்டி பானை? “ என்று எதுகை மோனையுடன் எழுதுவதை, எதுகை மோனையுடன் கிண்டல் செய்பவரைத் தெரியுமா? கிட்டத்தட்ட 120 வருடங்கள் பழமையான கவிதை வடிவமாக இருந்தாலும் இன்னமும் புதுக் கவிதை என்ற பெயருடன் உலா வரும் கவிதை வடிவமாக இருந்தாலும் , ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழின் பெருமையெனக் கருதப்படும் மரபுக் கவிதைகளாக இருந்தாலும் சரி, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தமிழில் புகழுடன் விளங்கும் ஹைக்கூ எனப்படும் கவிதை […]
கோடைக்கால காய்கறி விருந்து

கோடைக்காலத்தில் உழவர் சந்தைகள் மினியாப்பொலிஸ்-செயிண்ட் பால் மாநகரங்களிலும் பல்வேறு சுற்றுப்புற நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன. கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் புதிதாய் மலர்ந்த பூக்கள், புதிய காய்கறிகள், பழங்கள், துளிர் கீரைவகைகள், விதவிதமான கிழங்குங்கள், பூசனிகள் , பால், வெண்ணெய், முட்டை, தேன் போன்றவை இந்த சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்திலிருந்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் காய்கறிகளிலும் மற்றைய பொருட்களிலும் இரசாயனக் கலவை பூசப்படுவதில்லை. பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருட்களை நீண்ட நாள் […]
பெஃட்னா 2013 – ரொரோன்டோ தமிழ் விழாவில் மினசோட்டாவின் பங்களிப்பு

வட அமெரிக்காவில் தமிழ்ச் சமுதாயத்தின் செழிப்பும் அதன் தற்கால பிரதிபலிப்பும் சென்ற July 5-6-7 களில் கனேடிய ரொரோன்டோ மாநகரில் நடைபெற்ற குதூகல விழாவில் நன்றாகவே தென்பட்டது. தமிழ்தாயகங்களில் மேலை நாட்டு மோகம் ததும்பும் பொழுதும் தாயக தமிழ் மேதைகளும், வட அமெரிக்கத் தமிழன்பர்களும், தவ்வல்களும் கலாச்சார அடிப்படையில் ஒருங்கிணைந்து தத்தம் ஆற்றலை பகிர்ந்து கொண்டு தமிழ்த் தேன் மழையில் நனைய வைத்தார்கள். மினசோட்டா தமிழ்ச்சங்கம் பங்கேற்பு இந்த விழாவில் குறிப்பாக மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தாரும், தமிழ்ப் […]
தமிழ்ப் பயிற்சிப் பட்டறை

வட அமெரிக்காவில் எண்ணற்ற சங்கங்களைப் பார்த்திருப்பீர்கள், பல தமிழ்ச் சங்கங்களாவும் இருக்கக் கூடும். பெரும்பாலான சங்கங்கள், ஜனரஞ்சகம் என்ற போர்வையில் திரைப்படம் சார்ந்த ஆட்டத்துக்கும், பாட்டுக்கும் மட்டுமே முதன்மையளித்து செயலாற்றுவதையும் கண்டிருப்பீர்கள். கேளிக்கை நடவடிக்கைகளிலும் நல்ல கருத்துக்களையும், கலைகளையும் கற்றுத் தரும் நோக்கமுள்ள அமைப்புகள் கிடைப்பது அரிதாக உள்ள இக்காலத்தில், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பான மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி செய்து வரும் சேவையைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். கடந்த ஜுன் மாதம் 22 […]
கவிஞர் அறிவுமதி

சரிகை வேட்டியில்லை, பட்டுத் துண்டுமில்லை, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியில்லை, மொகலாய மன்னர்கள் அணியும் காலணியி்ல்லை, மொத்தத்தில் திரைப்படப் பாடலாசிரியர்/கவிஞர் என்றவுடன் நாம் வழக்கமாகக் கற்பனை செய்து கொள்ளும் உருவம் எதுவுமில்லை, ஆனால் தரமான பாடல்கள் பல எழுதி, தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பைப் பல வகையிலும் தந்தவர். பாரதிராஜா தொடங்கி, இளையராஜா வரை பல ஜாம்பவான்களுடனும் பணி செய்து, அந்த இணைப்புகளைத் தனது வாழ்க்கையின் உயர்வுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் […]
காந்தர்வக் குரலோன்

இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார், தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை […]