அன்றாடம்
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024

மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில் (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]
கிறிஸ்துமஸ் – கிறிஸ்து பிறப்பு – ஓர் எதார்த்த தேடல்

அனைவருக்கும் அன்பும், அமைதியும், சமாதானமும் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்…! ஊரெங்கும்… நகரெங்கும்…உலகெங்கும்… என எங்கு நோக்கினும் மாடிடைக் குடில்கள்; இறைமைந்தனை புகழ்ந்தேத்தும் மெல்லிசை பாடல்கள்… குடிசை குப்பங்கள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார கோபுரங்கள் வரை எங்கு பார்த்தாலும் பளபளக்கும் மின்விளக்குகள், மினுக்கும் தோரணங்கள். இவை எல்லாம் கிறிஸ்து பிறப்பைப் பரபரப்பாக வரவேற்க இயங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்……. என்னுள் சிதறி எழும் எண்ணங்கள்…! ஒருபுறம் குதூகலத்தையும், மறுபுறம் வேறுபட்ட தாக்கங்களையும் எற்படுத்துவதை தவிர்க்க முயலாது பகிர […]
வெறுப்பு சூழ் உலகு

‘சங்கி’, ‘திராவிடியா’, ‘கோட்டா ஜாதி’, ‘கிராஸ்பெல்ட்’, ‘பாவாடை’, ‘அரிசி மூட்டை’, ‘மூத்திர குடிக்கி’, ‘கூலிபான்’, ‘நூலாண்டி’, ‘முக்கா’, ‘அந்நிய கைக்கூலி’, ‘கிரிப்டோ கைக்கூலி’, ‘ஆண்ட பரம்பரை’, ‘வந்தேறி’, ‘சொம்பு தூக்கி’, ‘கொத்தடிமை’, ‘சொறியன்’ – நீங்கள் எந்தவொரு சமூக ஊடகத்தையும் பாவிப்பவராக இருப்பீர்களென்றால், ஊடக அகராதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சொற்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கும். மேலும், ‘கதறுடா’, ‘கக்கூஸ் கழுவு’, ‘பர்னால் தடவிக்கோ’, ‘உண்டகட்டி வாங்கித் தின்னு’, ‘தொங்கிடு’ போன்ற சில அறிவுரைகள் வழங்கப்படுவதையும் காதுகள், […]
நவராத்திரி நிகழ்வுகள்

“சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய சமுத்தியதா” என்ற வரிகளுடன் தொடங்கும் லலிதா சஹஸ்ரநாமத்தை முக்கிய சாரமாக கொண்டாடும் பண்டிகை சரத் நவராத்திரி. மனதின் உள் அகந்தை சொரூபத்தில் இருக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க அம்பிகை செய்யும் ஒரு யுத்தமே இந்த நவராத்திரி பண்டிகை. பத்து நாட்களின் முடிவில் சித்தத்தில் இருந்து எழும்பிய அம்பிகை மகிஷாசுரனை அழித்து பின் ராஜராஜேஸ்வரி சொரூபத்தில் மகிழ்வுடன் கொலுவேறும் நாளே விஜய தசமி என்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த […]
நவராத்திரி திருவிழா 2024

முப்பெருந்தேவியரான லட்சுமி, சக்தி, சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றும் விதமாகக் கொண்டாடப்படுவது நவராத்திரி. நவம் என்ற சொல்லுக்கு வட மொழியில் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்தியாவின் பல பகுதிகளில் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள். குஜராத் மாநிலத்தில் இவ்விழா நடனத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது. ஓவ்வொரு இரவும் மக்கள் ஒன்று கூடி நடனமாடுவார்கள். இந்த வகையான நடனத்தை கார்பா (garba) அல்லது தாண்டிய (dandiya) என்று அழைப்பார்கள். இந்த ஆண்டு மினசோட்டா மாநிலத்தில் உள்ள குஜராத் […]
வேட்டையன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை ”ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அவர்கள் இயக்கப்போகிறார் என்ற செய்தி வந்தபோதே ஒரு ஆர்வம் கிளம்பியது. ரஜினி அவர்களின் கமர்ஷியல் படங்கள் தான் நம்மை விசிலடித்து, கைத்தட்டி, ஆட்டம் போட்டுப் படத்தைப் பார்க்க வைக்கும் என்றாலும், புதிய இயக்குனர்களின் வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்தால் நல்லாயிருக்குமே என அவ்வப்போது எண்ணத் தோன்றும். கபாலி, காலா ஆகிய படங்களில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் அப்படி வேறுபட்ட கதையில் ரஜினியைக் காட்டினார். […]
‘டிரிக்கிள் டவுன்’ பொருளாதாரம்

உலக நாடுகள் பலவும், தங்களது நில அமைப்பு, வளங்கள், மக்களமைப்பு போன்ற பல காரணிகளை மனதில் கொண்டு தங்களுக்கு தேவையான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். அடிப்படையில் முதலாளித்துவம், சோஷியலிசம், கலப்பு பொருளாதாரம் என மூன்று முக்கிய கோட்பாடுகள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் பல நாடுகள் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. உதாரணமாக முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாடு இலாபத்தை இலக்காக வைத்து செயல்படக்கூடிய தனியார் நிறுவனங்களை சுதந்திரத்துடன், எந்தப் பொருளையும், எந்த விலையிலும் விற்க அனுமதிப்பது என்பதாகும். ஆனால் இந்த […]
‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]