Tag: Tamil poem
மறு பிறவி

சிவந்த மண்ணில் புதைந்தேன். தளிர் விட்டு முளைத்தேன். தண்ணீர் குடித்து வளர்ந்தேன். உரம் உண்டு செழித்தேன். கிளைகள் பல விட்டேன். நிழலைப் பலருக்குக் கொடுத்தேன். பூக்கள் பலர் கவரப் பூத்தேன். தேனீக்களைத் தேடி வரச் செய்தேன். சுவையான கனியானேன். சிறார்களிடம் கல்லெறி பட்டேன். அணில்கள் சுவைக்கும் பழமானேன் ரசித்து உண்ண பழம் கொடுத்தேன் இறைவனுக்கு என்னை அற்பணித்தேன் புயலில் நான் சரிந்தேன் கேட்பார் அற்று கிடந்தேன் என் முடிவை நெருங்கினேன் அடுப்புக்கு காய்ந்த விறகானேன் சுவைத்து […]
சிந்திய சிந்து

காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]